இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை
Updated on
2 min read

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின் முதல் மெட்ரோ ரயில் சேவை, பூந்​தமல்லி - வடபழனி தடத்​தில் விரை​வில் தொடங்​க​வுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குபிறகு அமை​யும் புதிய அரசு, ரயில் சேவையை தொடங்கி வைக்​கும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில் கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடம் (26.1 கி.மீ) ஒன்​றாகும்.

இத்​தடத்​தில் ஒரு பகு​தி​யாக, பூந்​தமல்லி புறவழிச்​சாலை நிலை​யம் - வடபழனிவரை 14.64 கி.மீ. தொலை​வுக்கு உயர்​மட்​ட​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தடத்​தில் மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யர் மற்​றும் அவரது குழு​வினர் கடந்த பிப்​ர​வரி​யில் ஆய்வு மேற்​கொண்​டனர்.

ரயில்வே தண்​ட​வாளத்​தின் தரம், மெட்ரோ ரயில் நிலை​யம், பிரேக்​கிங் தொழில்​நுட்​பம், பயணி​கள் பாது​காப்பு தொடர்​பாக ஆய்வு செய்​தனர். இதுத​விர, அதிவேக சோதனை ஓட்​டம் மேற்​கொண்​டனர்.

இதன்​முடி​வில், பூந்​தமல்லி முதல் வடபழனி வரை வழித்​தடத்தை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யர் ஒப்​புதல் அளித்​தார்.

அதே​நேரத்​தில், பூந்​தமல்​லி- போரூர் வரை 15 நிமிட இடைவெளி​யில் மெட்ரோ ரயில்​களை இயக்​க​வும், போரூர் சந்​திப்பு முதல் வடபழனி தடத்​தில் ஒவ்​வொரு திசை​யிலும் ஒரு நேரத்​தில் 25 கி.மீ. வேகத்​தில் இயக்​க​வும் நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, மார்ச் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், மார்ச் 15-ம் தேதி தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்​ட​தால், மெட்ரோ ரயில் சேவை தொடங்​கப்​ப​டாதநிலை உரு​வானது.

தற்போது சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை இன்று (மே 4) நடை​பெறவுள்​ளது. இதையடுத்து இன்​னும் ஒரு வார காலத்​தில் புதிய அரசு பதவி​யேற்​க​வுள்​ளது.

இந்​நிலை​யில், பூந்​தமல்லி முதல் வடபழனி வரை​யில் மெட்ரோ ரயில் சேவை விரை​வில் தொடங்​க​வுள்​ளது. ரயில் சேவை தொடங்​கும்​போது, பூந்​தமல்லி - போரூர் வரை அனைத்து நிலை​யங்​களில் நின்று செல்​லும்.

போரூர் முதல் வடபழனி வரை இடை​யில் உள்ள நிலை​யங்​களில் நிறுத்​தப்​ப​டாது. பூந்​தமல்லி முதல் வடபழனி வரை ரயில் இயக்​கப்​பட​வுள்​ள​தால், வடபழனி மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் பயணி​கள் இறங்​கி, சென்ட்​ரல் - பரங்​கிமலை (பச்சை நிற வழித்​தடம்) வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் மெட்ரோ ரயில்​களில் ஏறி, விரும்​பிய இடத்​துக்கு பயணிக்க இணைப்பு வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பூந்​தமல்லி - வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க தயா​ராக உள்​ளது.

புதிய அரசு அமைந்​தவுடன், இத்​தடத்​தில் ரயில் சேவையை தொடங்கி வைக்​கும். இத்​தடத்​தில் முக்​கிய நிலை​யங்​களான போரூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் தயா​ராக இருக்​கின்​றன.

போரூர் - வடபழனி தடத்​தில் ஆலப்​பாக்​கம், வளரச​வாக்​கம் போன்ற மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் இறு​திக்​கட்ட பணி​கள் நடை​பெறுகின்​றன. இது​போல, இத்​தடத்​தில் மற்ற ரயில் நிலை​யங்​களில் கட்​டு​மானப்​பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இந்த நிலை​யங்​களில் கட்​டு​மானப்​பணி​களை முடித்து, படிப்​படி​யாக பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை
சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம்: 12 லட்சம் வழக்குகள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in