சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம்: 12 லட்சம் வழக்குகள் பதிவு

சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம்: 12 லட்சம் வழக்குகள் பதிவு
Updated on
1 min read

சென்னை: கடந்த நிதி​யாண்​டில், சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் நிலை​யங்​கள், ரயில்​களில் டிக்​கெட் இல்​லாமல் பயணம், முறையற்ற பயணம் உள்​ளிட்ட பிரிவு​களில் 12.24 லட்​சம் வழக்​கு​கள் பதிந்​து, ரூ.65.16 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை ரயில்வே கோட்​ட​த்தில் கடந்த நிதி​யாண்​டில் (2025-26), ரயில் நிலை​யங்​கள் மற்​றும் ரயில்​களில் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

டிக்​கெட் இல்​லாமல் பயணம், முறையற்ற பயணம் மேற்​கொண்​டது தொடர்​பாக,12.24 லட்​சம் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, ரூ.65.16 கோடி அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

அறிவுறுத்தல்

பயணி​கள் ரயில் நிலைய வளாகத்​துக்​குள் நுழைவதற்கு முன்​னரே முறையான டிக்​கெட்​களைப் பெற்​று, அபராதம் மற்​றும் சட்ட நடவடிக்​கைகளைத் தவிர்க்க அறி​வுறுத்​தப்​படு​கின்​றனர்.

பயணி​கள் தங்​கள் பயணத்​தைத் தொடங்​கு​வதற்கு முன் டிக்​கெட்​களை சரி​பார்த்​துக் கொள்ள அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம்: 12 லட்சம் வழக்குகள் பதிவு
வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் ஹாஸ்டல், பிஜி வாடகை 10 சதவீதம் அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in