

கோப்புப் படம்
சென்னை: மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஒட்டி, பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
அதன் விபரம்: எல்.பி. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி. - எம்.ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) சந்திப்பு வரை சாலை முழுவதுமாக மூடப்படுகிறது.
திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையுமாறு மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
பெசன்ட் நகரிலிருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலை, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்.
எல்.பி. சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள், சாஸ்திரி நகர் முதல் அவென்யூ, 11-வது குறுக்குச் சாலை, 8-வது குறுக்குச் சாலை, 10-வது குறுக்குச் சாலை வழியாக எம்.ஜி. சாலையை சென்றடையலாம்.
மேலும் சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி ஒருவழிப் பாதையாகவும், 11-வது குறுக்குச் சாலை திருவான்மியூர் நோக்கி ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ, முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பை சென்றடையலாம்.
இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.