

சென்னை: உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதேபோல், புதுச்சேரியில் ஏப்.9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.