மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் முதலில் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு ராமசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்ரி, கே. ராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

முதல்​வர் விஜய் தலை​மை​யில் புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசின் முதல் சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர், ஆளுநர் உரை​யுடன் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக காலை 9.52 மணிக்கு பேரவை வளாகத்​துக்கு வந்த ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகருக்கு பேண்டு வாத்​தி​யங்​கள் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர், செயலர் சாந்தி ஆகியோர் பூங்​கொத்து வழங்கி அவரை வரவேற்​று, பேர​வைக்குள் அழைத்​துச் சென்​றனர்.

அவருக்கு முன்​பாகவே முதல்​வர் விஜய், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் உள்​ளிட்ட உறுப்​பினர்​கள் அனை​வரும் பேர​வைக்​குள் வந்து அமர்ந்​திருந்​தனர். காலை 10 மணிக்கு தமிழ்த்​தாய் வாழ்த்​து, தேசிய கீதத்துடன் பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. பின்​னர், ஆளுநர் அர்​லேகர் தனது உரையை தொடங்​கி​னார். தமிழில் ‘வணக்​கம்’ என்று கூறி​விட்​டு, ஆங்​கிலத்​தில் 37 நிமிடங்​கள் உரையை வாசித்​தார்.

​மாநிலத்​தின் நிதி​நிலையை சீரமைத்​து, அரசால் அறிவிக்​கப்​பட்ட வாக்​குறு​தி​கள் அனைத்​தும் ஒவ்​வொன்​றாக நிறைவேற்​றப்​படும் என்று ஆளுநர் உரை​யில் தமிழக அரசு உறுதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கையே தொடரும். ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சிறப்பு போதைப் பொருள் தடுப்​புப் படை அமைக்​கப்​படும். புதிய தொழில் கொள்கை விரை​வில் அறிவிக்கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நேற்றைய உரையை ஆதரித்து, எதிர்த்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடியுள்ளது.

மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
ஜூன் 23 வரை சட்டப்பேரவை கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in