

சென்னை: உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 3 நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா க்ளேட் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இவர்கள் 3 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மூவரும் உறுதிமொழி எடுத்து, உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.