அதிகாரிகள் மீதான இடைநீக்கத்துக்கு தடை விதித்தால் துறைரீதியிலான விசாரணையின் புனிதம் கெட்டுவிடும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

அதிகாரிகள் மீதான இடைநீக்கத்துக்கு தடை விதித்தால் துறைரீதியிலான விசாரணையின் புனிதம் கெட்டுவிடும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து
Updated on
1 min read

சென்னை: மோசடி, குற்​றச்சதி போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குள்​ளான அதி​காரி​கள் மீது எடுக்​கப்​படும் தற்​காலிக இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்து மீண்​டும் அந்த அதி​காரியையே பணி​யாற்ற அனு​ம​தித்​தால் துறைரீ​தி​யில் நடத்​தப்​படும் விசா​ரணை​யின் புனிதம் கெட்​டு​விடும், அந்த விசா​ரணையே அர்த்​தமற்​ற​தாகிப்​ போய்​விடும் எனக் கருத்து தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, திருப்​பத்​தூர் மாவட்ட பதி​வாளரின் இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்த தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

பத்​திரப்​ப​திவுத் துறை​யில் சமீபத்​தில் திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி மற்​றும் தரு​மபுரி மாவட்ட பதி​வாளர்​களை தற்காலிக இடைநீக்​கம் செய்து பத்​திரப்​ப​திவுத் துறை தலைவர் நடவடிக்கை எடுத்​தார்.

இந்​நிலை​யில் தனக்கு எதி​ரான தற்​காலிக இடைநீக்க உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி, திருப்​பத்​துார் மாவட்ட பதி​வாள​ரான செந்​துார் பாண்​டியன் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, இடைநீக்க உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​திருந்​தார்.

இந்த தடையை நீக்​கக்​கோரி தமிழக பத்​திரப்​ப​திவுத் துறை செயலரும், பதிவுத்​துறைத் தலை​வரும் தாக்​கல் செய்​திருந்த மேல் முறை​யீட்டு மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, தற்​காலிக இடைநீக்​கம் என்​பது தண்​டனை அல்ல.

குற்​றச்​சாட்டு குறித்த விசா​ரணை​யின்​போது சம்​பந்​தப்​பட்ட அதி​காரி தொடர்ந்து பதவி​யில் நீடிக்கா வண்​ணம் தற்​காலிக​மாக அவரை பதவி​யில் இருந்து விலக்கி வைப்ப​தற்​காக எடுக்​கப்​படும் துறை சார்ந்த நடவடிக்​கையே. இது​போன்ற உத்​தர​வு​களில் நீதி​மன்​றங்​கள் மிகுந்த எச்​சரிக்கை உணர்​வுடன் செயல்பட வேண்​டும்.

மோசடி, குற்​றச் சதி உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு உள்​ளான அதி​காரி​கள் மீதான இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்து அவரையே பணி​யாற்ற அனு​ம​தித்​தால் துறை ரீதி​யில் நடத்​தப்​படும் விசாரணை​யின் புனிதம் கெட்​டு​விடு​வதுடன் மட்​டுமின்றி அந்த விசா​ரணையே அர்த்​தமற்​ற​தாகி​விடும் எனக் கருத்து தெரி​வித்து, திருப்​பத்​தூர் மாவட்ட பதி​வாளரின் இடைநீக்க உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை வி​தித்து தனி நீதிபதி பிறப்பித்​த உத்​தர​வை ரத்​து செய்​து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

அதிகாரிகள் மீதான இடைநீக்கத்துக்கு தடை விதித்தால் துறைரீதியிலான விசாரணையின் புனிதம் கெட்டுவிடும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து
போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in