கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

கடற்கரை - தாம்பரம் இடையே  சிறப்பு இலவச பேருந்து
Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெறும் மறுசீரமைப்பு பணி காரண​மாக, கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து பயணி​களின் வசதிக்​காக, ரயில் டிக்​கெட், சீசன் டிக்​கெட் வைத்​திருக்​கும் பயணி​களுக்​காக, தாம்​பரம் ரயில் நிலை​யத்​திலிருந்து கடற்​கரைக்​கும், கடற்​கரையி​லிருந்து தாம்​பரத்​துக்​கும் தலா 20 சிறப்பு இலவச பேருந்துகள் இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த சிறப்பு இலவச பேருந்துகளின் சேவையை ரயில்வே நேற்று தொடங்​கியது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த பேருந்துகள் தடை​யின்றி செயல்​பட​வும், அனைத்து முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களுக்கு வழி​காட்​டும் வித​மாக​வும் ரயில் டிக்​கெட் பரிசோதகர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் மின்​சார ரயில் டிக்​கெட், மாதாந்​திர சீசன் டிக்​கெட் வைத்​திருப்​பவர்​களை பரிசோ​திப்​பார்​கள். இந்த பேருந்து சேவை அலு​வலக நேரங்​களில் காலை 6.40 மணி​முதல் 9.40 வரை, மாலை 5 மணி​முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளி​யில் இயக்​கப்​படும்.

இந்த பேருந்துகள் தாம்​பரத்​திலிருந்து புறப்​பட்டு கிண்​டி, அண்​ணா​சாலை, சேப்​பாக்​கம், தலை​மைச் செயல​கம் வழி​யாக இயக்​கப்பட உள்​ளன.

சில பேருந்துகள் கடற்​கரையி​லிருந்து தி.நகர், எழும்​பூர், சென்ட்​ரல் வழி​யாக இயக்​கப்​பட​வுள்​ளன என்று கூறினர்.

கடற்கரை - தாம்பரம் இடையே  சிறப்பு இலவச பேருந்து
கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில் டிஎஸ்பி தலைமறைவு: விசாரணை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in