முதல்வர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

முதல்வர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
Updated on
1 min read

செங்கல்பட்டு: முதல்​வர் விஜய்​யிட​மிருந்து விவா கரத்து கோரி தொடர்ந்த வழக்கை அவரது மனைவி சங்​கீதா வாபஸ் பெற்​றார். அதையடுத்து இந்த வழக்கை செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றம் முடித்து வைத்துள்ளது.

முதல்​வர் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு லண்​டனைச் சேர்ந்த தனது ரசிகை​யான சங்​கீதாவை காதலித்து திரு​மணம் செய்தார். இவர்​களுக்கு ஜேசன் சஞ்சய் (25) என்ற மகனும் மற்​றும் திவ்யா சாஷா (20) என்ற மகளும் உள்​ளனர்.

இந்​நிலை​யில் தனக்கு விவாகரத்து கோரி, செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​தில் சங் கீதா வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவருக்கும், எனக்​கும் இடையே ஏற்​பட்ட தனிப்​பட்ட பிரச்​சினை காரண​மாக எங்​களுக்குள் விரிசல் ஏற்​பட்​டது. எனவே விவாகரத்து வழங்க வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு செங்​கல்பட்டு குடும்​ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு நேற்று மீண்டும் விசா ​ரணைக்கு வந்​தது. நீதி​மன்ற அறை மூடப்​பட்டு இரு தரப்பு வழக்​கறிஞர் கள் மட்​டும் அனு​ம​திக்​கப்பட்டு விசா​ரணை ரகசி​ய​மாக நடந்​தது. அப்​போது சங்​கீதா சுமார் 20 நிமிடங்​கள் காணொலி காட்சி வாயி​லாக ஆஜராகி, கணவர் விஜய்க்கு எதி​ராக, தான் தொடர்ந்​துள்ள விவாகரத்து மற்றும் குடி​யிருப்பு உரிமை கோரும் வழக்கை தனது பரிபூரண சுயநினை​வுடன் தாமாக முன் வந்து வாபஸ் பெறு​வ​தாக தெரிவி்த்​தார். அதையடுத்து சங்​கீதாதரப்​பில் இந்த வழக்கை வாபஸ் பெறு​வ​தாகக்​கூறி மனு தாக்​கல் செய்​யப்பட்​டது.

அந்த மனுவை ஏற்ற நீதிபதி டி.சுஜா​தா, வழக்கை முடித்து வைத்து உத்​தர​விட்​டுள்ளார். மேலும், எதிர்​காலத்​தில் தேவைப்​பட்​டால் மீண்​டும் வழக்கு தொடரலாம் என சங்​கீ​தாவுக்கு அனு​ம​தி​யளித்​தும் உத்​தர​விட்​டுள்​ளார்.

முதல்வர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? - பேரவையில் உதயநிதியின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in