காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்கள்: நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பு

காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்களை பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன். | படம்: எல்.சீனிவாசன் |

காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்களை பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: பக​வான் குரு ரவி​தாஸ் மகா​ராஜின் 650-வது பிறந்​த​நாள் விழாவையொட்​டி, காசியி​லிருந்து புனித கலசங்​கள் தமிழகம் கொண்டு வரப்​பட்​டு, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

‘பிறப்பு அடிப்​படை​யில் மனிதர்​களை பிரிக்​கக் கூடாது, அனை​வரும் இறைவனின் குழந்​தைகள்’ என்று போதித்​தவர் பகவான் குரு ரவி​தாஸ் மகா​ராஜ். இவரின் 650-வது பிறந்​த​நாள் அடுத்த ஆண்டு பிப். 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது.

இதையொட்டி கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்​கி, 2027-ம் ஆண்டு பிப்​.20-ம் தேதி வரை இந்​தியா முழு​வதும் அரசு மற்​றும் ஆன்​மீக அமைப்​பு​களால் அவரின் பிறந்​த​நாள் கொண்​டாட்​டங்​கள் நடக்க உள்​ளன.

அந்த வகை​யில், அவர் பிறந்த காசியில் இருந்து தி.நகரில் உள்ள இந்தி பிரச்​சார சபாவுக்கு புனித கலசங்​கள் கொண்டு வரப்​பட்​டன. பின்​னர் தமிழக பாஜக அலு​வல​கத்​துக்கு புனித கலசங்​கள் நேற்று ஊர்​வல​மாக எடுத்து வரப்​பட்​டன.

இவற்றை மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பெற்​றுக்​கொண்​டார். பின்​னர், அந்த கலசங்​களை தமிழகம் முழு​வதும் எடுத்து செல்​லும் வகை​யில் மாவட்​டத் தலை​வர்​கள், நிர்​வாகி​களிடம் ஒப்​படைத்​தார்.

இதுதொடர்​பாக நயி​னார் நாகேந்​திரன் எக்ஸ் வலைத்​தளத்​தில், ‘‘தமிழகத்​தில் உள்ள அனைத்து மாவட்​டங்​களுக்​கும் இந்த புனித கலசங்​கள் கொண்டு செல்​லப்​படும். பகவான் குரு ரவி​தாஸ்​ஜி​யின் போதனை​களை மக்​களிடம் பரப்ப ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது'' என்றார்.

<div class="paragraphs"><p>காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்களை பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன். | படம்: எல்.சீனிவாசன் |</p></div>
உதயநிதி காரில் ஏற முயன்ற பழனிசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in