

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் நேற்று முடிந்ததும் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மதியம் 12.30 மணி அளவில் வரிசையாகப் புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து ஏற முயன்றார்.
உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பதறிப்போய், "சார், இது உதயநிதி ஸ்டாலினுடையது" என்று தெரிவித்தனர். அதைக்கேட்டு புன்னகைத்த பழனிசாமி, அருகே நின்றிருந்த தனது காரை நோக்கிச் சென்றார்.
கடந்த 2022-ம் ஆண்டும் பேரவை கூட்டத் தொடரின் போதும், உதயநிதியின் காரில் பழனிசாமி தவறுதலாக ஏற முயன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.