மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டதா?
மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: மயிலாப்பூர் திமுக வேட்​பாளரின் உதவி​யாளர் வீட்​டில் ரூ.1.50 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது. இந்த பணம் வாக்​காளர்​களுக்கு பட்​டு​வாடா செய்ய பதுக்​கப்​பட்​ட​தா? என்​பது குறித்து விசா​ரணை நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று ஒரே கட்​ட​மாக நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்றன.

மேலும், வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வா​டா, பரிசுப் பொருட்​கள் கொடுப்​ப​தைத் தடுக்க பறக்​கும் ​படை​யினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை மந்​தைவெளிப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் சத்​தி​யமூர்த்தி என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் வாக்​காளர்​களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது.

500 ரூபாய் நோட்டு கட்​டு

இதையடுத்​து, தேர்​தல் பறக்​கும் படை​யினர், வரு​மான வரித்​துறை​யினருடன் இணைந்து நேற்று காலை அந்த வீட்​டில் திடீர் சோதனை நடத்​தினர்.

அப்​போது, வீட்​டின் சமையல் அறையில் ரூ.70 லட்​சம், படுக்கை அறை​யில் ரூ.80 லட்​சம் என 500 ரூபாய் நோட்டு கட்​டு​களாக மொத்​தம் ரூ.1.50 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது.

ஆவணங்​களும் பறி​முதல்

மேலும், யார் யாருக்​கெல்​லாம் பணம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது என சில அரசி​யல் கட்​சிகளின் பெயர், கட்சி பிர​தி​நி​தி​கள் பெயர் அடங்​கிய ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

சோதனைக்கு உள்​ளான சத்​தி​யமூர்த்​தி, மயி​லாப்​பூர் திமுக வேட்​பாளரின் உதவி​யாளர் என கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் குறித்து தேர்​தல் பறக்​கும் படை​யினர் மற்​றும் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் தொடர்ந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்
கம்போடியாவுக்கு ஆட்களை கடத்த முயன்ற 4 பேர் கும்பல் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in