கம்போடியாவுக்கு ஆட்களை கடத்த முயன்ற 4 பேர் கும்பல் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

கம்போடியாவுக்கு ஆட்களை கடத்த முயன்ற 4 பேர் கும்பல் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: டேட்டா என்ட்ரி வேலை என்ற பெயரில் சைபர் மோசடிகளில் ஈடு​படுத்​து​வதற்​காக தமிழகத்​திலிருந்து கம்​போடி​யா​வுக்கு ஆட்​களை கடத்த முயன்ற 4 பேர் கும்​பலை, சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

வெளி​நாட்டு வேலை என்ற பெயரில் ஏழைகளை குறி வைத்​து, அவர்​களுக்கு அதிக சம்​பளம் தரு​வ​தாக ஆசை​வார்த்தை கூறி வெளி​நாட்​டுக்கு அழைத்​துச் சென்​று, அவர்​களுக்கு தெரி​யாமலே அவர்​களை அக்​கும்​பல் கம்​போடி​யா​வில் உள்ள சைபர் மோசடி கும்​பலிடம் விற்​பனை செய்ய முயல்​வ​தாக, தமிழக சைபர் க்ரைம் போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

குறிப்​பாக, மதுரை, மேலூரைச் சேர்ந்த சிலரை வெளி​நாட்​டில், ‘டேட்டா என்ட்​ரி’ வேலை என்ற பெயரில் சில முகவர்​கள் அணுகி உள்​ளனர். அதிக சம்​பளம், எளி​தான வேலை, இலவச தங்​கும் இடம் வழங்​கு​வ​தாக உறுதி அளித்​துள்​ளனர். இதற்கு சம்​மதம் தெரி​வித்​தவர்​களுக்கு தட்​டச்சு சோதனை வீடியோ நேர்​காணல் மற்​றும் மருத்​துவ பரிசோதனை போன்​றவற்றை போலி​யாக நடத்தியுள்​ளனர்.

இதில் தேர்​வானவர்​களை கம்போடியாவுக்கு அழைத்​துச் செல்ல ஏற்​பாடு​கள் நடை​பெற்​றுள்​ளன. இதை அறிந்த மாநில சைபர் க்ரைம் கூடு​தல் டிஜிபி அனிஷா ஹூசைன், இந்த கும்​பலை கைது செய்ய உத்​தர​விட்​டார். அதன்​படி, அப்​பிரிவு எஸ்​.பி. ஷஹ்​னாஸ் தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

இதில், மோசடி கும்​பல் மதுரையைச் சேர்ந்​தவர்​களை சென்னை விமான நிலை​யத்​திலிருந்து விமானம் மூலம் வெளி​நாட்​டுக்கு அழைத்​துச் சென்​று, அங்கு கம்​போடி​யா நாட்டு சைபர் மோசடி கும்​பலிடம் விற்​பனை செய்ய திட்​ட​மிட்​டது தெரிந்​தது.

இதையடுத்​து, சென்னை விமான நிலை​யத்​தில் கண்​காணித்து 3 முகவர்​கள் மற்​றும் 1 வழி​காட்டி என 4 பேரை கைது செய்​தனர். மேலும், சைபர் மோசடி கும்​பலுக்கு விற்​பனை செய்​யப்பட இருந்​தவர்​களை மீட்டு குடும்​பத்​தினரிடம் ஒப்​படைத்​தனர்.

சைபர் மோசடி கும்​பலிடம் விற்​பனை செய்​யப்​படு​பவர்​கள் சைபர் குற்​றச் செயல்​களில் ஈடுபடகட்​டாயப்​படுத்​தப்​படு​கிறார்​கள். மறுப்​பவர்​கள் அல்​லது இலக்கை சாதிக்​காதவர்​கள் அடித்து துன்​புறுத்​தப்​படு​கிறார்​கள்.

எனவே, வெளி​நாட்டு வேலை பெறு​வதற்கு முன்​னர் நம்​பகத் தன்மை குறித்து தெரிந்து கொண்டு செயல்​படுங்​கள் என சைபர் க்ரைம் போலீ​ஸார் பொதுமக்​களுக்​கு அறி​வுறுத்​தியுள்​ளனர்​.

கம்போடியாவுக்கு ஆட்களை கடத்த முயன்ற 4 பேர் கும்பல் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
ஒசூர்: தேர்தலில் வாக்களிக்க பெங்களூருவிலிருந்து காரில் திரும்பியபோது விபத்து; 3 இளைஞர்கள் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in