காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ராகுல் உறுதி

புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல். படம்: எம் சாம்ராஜ்

புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல். படம்: எம் சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: ​காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்​தால் 6 மாதங்​களில் உள்​ளாட்சி தேர்​தல் நடத்​தப்​படும், புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என புதுச்​சேரி​யில் ராகுல் காந்தி வாக்​குறுதி அளித்​தார்.

புதுச்​சேரி காங்​கிரஸ் வேட்​பாளர்​களை ஆதரித்​து, கிழக்கு கடற்​கரை சாலை​யில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்த மண்ணை நேசிக்​கிறேன். புதுச்​சேரி மக்​களு​டைய அன்​பு, நட்​பு. தோழமை இவற்றை எல்​லாம் நினைத்து அடிக்​கடி இங்கு வர ஆசைப்​படு​கிறேன். ஆனால், இப்​போது இங்கு வரும்​போது என் மனதில் கவலைகள் படர்​கிறது.

புதுச்​சேரியை ஆட்சி செய்​பவர்​கள் மண்​ணின் மைந்​தர்​கள் அல்ல, எங்கோ இருந்து புதுச்​சேரியை ஆட்சி செய்​கின்​றனர். இங்கு நடக்​கும் ஆட்சி மக்​களின் விருப்​பத்தை செயல்​படுத்​தும் அரசு அல்ல, டெல்​லி​யில் இருந்து கருத்​துகளை திணிப்​பவர்​களின் கீழ் செயல்​படும் அரசாக உள்​ளது. பாஜக கொள்​கை, சித்​தாத்​தங்​களை புதுச்​சேரி​யில் புகுத்த நினைக்​கின்​றனர்.

புதுச்​சேரி மக்​களின் எண்​ணங்​களை ஏற்று நடத்​தும் ஆட்சி இங்கு நடக்​க​வில்​லை. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசை முந்​திக்​கொண்டு துணைநிலை ஆளுநர் செயல்​படு​கிறார். இதை சரிசெய்ய தேவை மாநில அந்​தஸ்​து. பல ஆண்​டு​களாக உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்​தப்​பட​வில்​லை.ஒரு அரசர் போல புதுச்​சேரியை துணைநிலை ஆளுநர் ஆட்சி செய்​வதை நாங்​கள் விரும்​ப​வில்​லை. புதுச்​சேரி மக்​கள்​தான் இந்த அரசை ஆள வேண்​டும்.

எனவே​தான், ‘மாநில அந்​தஸ்து வேண்​டும்’ என்று கூறுகிறோம். நாங்​கள் அதை கண்​டிப்​பாக தரு​வோம். காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்​தால், 6 மாதங்​களில் புது​வை​யில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்​தப்​படும். அடுத்த தலை​முறை தலை​வர்​கள் உள்​ளாட்​சித் தேர்​தல் மூலம் அரசு நிர்​வாகத்​துக்கு வரு​வார்​கள்.

அனைத்து துறை​ பணி​களுக்​கும் 30 சதவீத கமிஷன் பெறப்​படு​கிறது. மது​பான தொழிற்​சாலைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ரெஸ்டோ பார்​கள், மது​பான கடைகள் வழி​பாட்டு தலங்​கள், கல்வி நிலை​யங்​களுக்கு அருகே அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதை அகற்ற கோரிக்கை வைத்​தும் அரசு செவி சாய்க்​க​வில்​லை.

கோயில் நிலம் கொள்ளை: மக்​களிடம் மட்​டுமல்ல, ஆண்​ட​வனிட​மும் கொள்ளை அடித்​துள்​ளனர். கோயில் நிலங்​கள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டுள்​ளது. சட்ட ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. இரவில், பெண்​கள், குழந்​தைகள் நடமாட முடிய​வில்​லை. பள்​ளி, கல்​லுாரி​களில் போதைப்​பொருட்​கள் பயன்​படுத்​தப்​படு​கிறது. இதுகுறித்து ஆளுநருக்கு தெரிந்​தும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை. புதுவை மக்​களின் உண்​மை​யான குரலை ஒலிக்​கும் அரசை, இந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேர்வு செய்​யுங்​கள்.இவ்​வாறு ராகுல் பேசி​னார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல். படம்: எம் சாம்ராஜ்</p></div>
சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை - முழு விவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in