அமோனியா வாயுக் கசிவால் 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’

வரு​வாய்த் துறை அதி​காரி​கள் நடவடிக்கை
அமோனியா வாயுக் கசிவால் 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’
Updated on
1 min read

திரு​வள்​ளூர்: அமோனியா வாயுக் கசி​வால் 18 பேரின் உயி​ரிழப்​புக்கு காரண​மான கன்​னிகைப்​பேர் கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​துக்​கு, நேற்று வரு​வாய்த் துறை அதி​காரி​கள் ‘சீல்’ வைத்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வந்த இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இந்த விபத்​தில் பாதிக்​கப்​பட்ட 83 பேரில், கடந்த 2-ம் தேதி இரவு வரை 18 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். இந்​நிலை​யில், விபத்து நடந்த தனி​யார் நிறு​வனத்​தில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த 400 டன் இறால் உள்​ளிட்ட கடல் உணவு​கள் சேமிப்பு கிடங்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டது.

தொடர்ந்​து, நிறு​வனத்​தில் உள்ள அமோனியா வாயுவை தொழில்​நுட்ப வல்​லுநர்​களால் பாது​காப்​பாக அகற்​றும் பணி கடந்த 4-ம் தேதி முதல், நேற்று முன் தினம் வரை நடை​பெற்​றது.

முதல் கட்​ட​மாக, சேமிப்பு தொட்​டிகளில் இருந்​து, 2.9 டன் அமோனியா வாயு அகற்​றப்​பட்​டது; 2-ம் கட்​ட​மாக நிறு​வனத்​தின் குளிரூட்​டும் அறை, பதப்​படுத்​தும் கிடங்கு உள்​ளிட்ட இடங்​களில் குழாய்​களில் தேங்​கி​யிருந்த 700 கிலோ அமோனியா வாயு, சல்​பியூரிக் ஆசிட் மூலம் தூய்​மைப்​படுத்தி அகற்​றப்​பட்​டது.

இச்​சூழலில், திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவிதா உத்​தர​வின் பேரில், காவல்​துறை, தீயணைப்பு, ​மீட்​புத் துறை​யினர் உள்​ளிட்ட துறை​யினர் முன்​னிலை​யில், நிறு​வனத்​தின் நிர்​வாக அலு​வல​கம், தொழிலா​ளர்​கள் தங்​கும் கூடம், உணவுப் பொருட்​களை பதப்​படுத்​தும் கூடம், அமோனியா வாயு சேமிப்பு தொட்​டிகள் அடங்​கிய வளாகம் ஆகிய​வற்றுக்கு நேற்று திரு​வள்​ளூர் கோட்​டாட்​சி​யர் ரவிசந்​திரன் தலை​மையி​லான வரு​வாய்த் துறை​யினர் ‘சீல்’ வைத்​தனர்.

மேலும், தனி​யார் நிறு​வனத்​தின் வளாகத்​தில் சிறிய அளவி​லான கழி​வு​கள் மற்​றும் வாக​னங்​கள் ஆகிய​வற்றை அப்​புறப்​படுத்த வேண்​டிய பணி​கள் இருப்​ப​தால், அப்​பணி​களை முடித்​து, ஜூலை 9-ம் தேதி (இன்​று) தனி​யார் நிறு​வனத்​தின் நுழை​வா​யிலை மூடி ‘சீல்’ வைக்​கப்​படும் என, கோட்​டாட்​சி​யர்​ ரவிசந்​திரன்​ தெரி​வித்​துள்ளார்.

அமோனியா வாயுக் கசிவால் 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’
ஆந்திராவில் இருந்து காரில் குட்கா கடத்திய வியாபாரி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in