கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி தேவை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி தேவை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அனு​மதி கட்​டா​யம் என தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

விநாயகர் சதுர்த்​தியை ஒட்டி நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​ப​தால் மாசு ஏற்​படு​கிறது. அறிவிக்​கப்​ப​டாத நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும் என கோரி சென்னை புதுப்​பேட்​டையை சேர்ந்த ஹரிஹரன் என்​பவர் தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்​வில் கடந்த 2023-ம் ஆண்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்​வு, “சுற்​றுச்​சூழல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நீலாங்​கரை, பட்​டினப்​பாக்​கம் கடற்​கரைகளில் சிலைகளை கரைக்க அனு​ம​திக்க முடி​யாது” உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த வழக்கு கடந்த செப்​.17-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​ய​நா​ராயணா தலை​மையி​லான அமர்வு அளித்த உத்​தர​வில், “கடலில் சிலைகளை கரைக்க தமிழ்​நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணை​யத்​தின் கடலோர ஒழுங்​கு​முறை மண்டல அனு​மதி பெறு​வது கட்​டா​யம். அதை இந்த ஆண்டு சிலை கரைப்​பின்​போதே கடைபிடிக்க வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்த வழக்​கு, நீதித்​துறை உறுப்​பினர் தினேஷ்கு​மார் சிங் தலை​மையி​லான அமர்​வி்ல் நேற்று மீ்ண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நகராட்சி நிர்​வாகத்​துறை கூடு​தல் செயலர் தாக்​கல் செய்த அறிக்​கை​யில், “சிலைகளை கரைப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வு​கள், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு பிறப்​பித்த உத்​தர​வு, மத்​திய மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யம் உரு​வாக்​கிய வழி​காட்டு விதி​களை தமிழக அரசு கடைபிடிக்​கும்.

சிலைகளை இயற்கை நீர்​நிலைகளில் கரைப்​ப​தற்கு பதிலாக, தற்​காலிககுளங்​களை அமைத்​து, அதில் சிலைகளை கரைக்க, நடவடிக்கை எடுப்​பது தொடர்​பான சாத்​தி​யக்​கூறுகள் ஆராயப்​படும்” என கூறப்​பட்​டுள்​ளது.

நேற்​றைய விசா​ரணை​யின்​போது, தமிழக அரசு தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில் இடம்​பெற்ற அம்​சங்​கள் தொடர்​பாக பதில் அளிக்க மனு​தா​ரர் தரப்​பில் அவகாசம் கோரப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த வி​சா​ரணை அக்​.13-ம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி தேவை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிக்கப்படாது: புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in