புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை: 2 நாள் பொறுத்திருங்கள் என பழனிசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை: 2 நாள் பொறுத்திருங்கள் என பழனிசாமி அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுச்​சேரி: தமிழக அரசி​யலில் அசா​தாரண சூழல் நில​வும் நிலை​யில், புதுச்சேரி நட்​சத்​திர விடு​தி​யில் தமிழக அதி​முக எம்​எல்​ஏக்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, புதுச்சேரிக்கு நேற்று மாலை விரைந்து வந்​து, அங்கு தங்​கி​யிருந்த எம்​எல்​ஏக்​களு​டன் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழகத்​தின் பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முகவை பின்​னுக்​குத் தள்ளி தமிழக வெற்​றிக் கழகம் தனித்து நின்று 108 இடங்​களில் வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்​க​வில்​லை. காங்​கிரஸ் தனது 5 எம்​எல்​ஏக்​களின் ஆதரவை அளித்​திருக்​கிறது.

பிற கட்​சிகளின் ஆதரவை பெறு​வ​தில் தவெக தொடர்ந்து முயற்​சித்து வரு​கிறது. இந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் புதுச்​சேரி பூர்​ணாங்​குப்​பத்​தில் உள்ள தனி​யார் ரிசார்ட்​டுக்கு வந்து தங்​கு​மாறு போன் மூலம் அக்​கட்சி தலைமை அறி​வுறுத்​தி​யது.

தொடர்ந்து நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஒவ்​வொரு​வ​ராக வரத் தொடங்​கினர். அங்கு அவர்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த எம்​எல்​ஏக்​கள் தங்​கும் ஏற்​பாடு​களை சி.​வி.சண்​முகம் செய்​துள்​ளார்.

இதனிடையே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று மாலை சென்​னை​யில் இருந்து புதுச்​சேரிக்கு வந்​தார். அவருடன் கே.பி.முனு​சாமி, எஸ்.பி.வேலுமணி, விஜய​பாஸ்​கர், அன்​பழகன் உள்​ளிட்​டோரும் வந்​தனர்.

புதுச்​சேரி நட்​சத்​திர விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டிருந்த எம்​எல்​ஏக்​களு​டன் பழனி​சாமி ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். ஆலோ​சனை நடந்த அறை​யில் எம்​எல்​ஏக்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

இரவு 7 மணிக்கு வந்த பழனி​சாமி 8.15 மணிக்கு புறப்​பட்​டார். அவர் அங்​கிருந்த 40-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​களிடம் முக்​கிய ஆலோ​சனை நடத்தி விட்டு சென்​ற​தாக​வும், அவர்​களிடம் கையெழுத்து வாங்​கிய​தாக​வும் தெரி​கிறது.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களை சந்​திக்​காமல் பழனி​சாமி புறப்​பட்​டார். முன்னதாக எம்​எல்​ஏக்​களிடம் ஆலோ​சனை நடத்​திய பழனி​சாமி, புதிய ஆட்சி அமைவ​தில் தற்​போது நில​வும் அசா​தாரண சூழலை குறிப்​பிட்​டதோடு, ‘நம்​மிடம் இரண்​டு​வித​மான வாய்ப்​பு​கள் உள்​ளன.

ஒன்​று, தவெகவை ஆதரிப்​பது அல்​லது வேறு​வித​மான கூட்​ட​ணியை (தி​முக ஆதர​வுடன்) உரு​வாக்​கு​வது’ என்று குறிப்​பிட்​டுள்​ளார். அப்​போது, எம்எல்ஏக்​கள் அவர​வர் கருத்​துகளைத் தெரிவிக்க, அதை மிக​வும் கூர்ந்து கவனித்து பழனி​சாமி உள்​வாங்​கிக் கொண்​ட​தாகச் சொல்​கிறார்​கள்.

இறு​தி​யாக, “பொறுத்​தால் சாதிக்​கலாம். யாரும் அவசரம் காட்​டத் தேவை​யில்​லை. நமக்கு நல்ல எதிர்​காலம் இருக்​கிறது. இரண்டு நாட்​கள் மட்​டும் காத்​திருங்​கள்” என்று அறி​வுரை கூறி​யிருக்​கிறார் பழனி​சாமி.

சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ர்

முன்னதாக பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்​டத்​தில் அதி​முக சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ராக பழனி​சாமி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை: 2 நாள் பொறுத்திருங்கள் என பழனிசாமி அறிவுறுத்தல்
விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in