விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: ‘சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக, ஆட்சி அமைப்​ப​தில் நீடிக்​கும் இழுபறிக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்’ என, பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: கடந்த காலங்​களை போலவே தமிழகத்​தில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுக்கு எதி​ராக, ஆளுநர்​களை வைத்து அரசி​யல் நடத்​தும் மத்​திய அரசு தற்​போதும் இடையூறு செய்து வரு​கிறது.

அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்ற தவெக​வுக்கு ஆட்சி அமைப்​ப​தற்கு அழைப்பு விடுக்​காமல் ஆளுநர் காலம் தாழ்த்​து​வது அரசி​யலமைப்​பிற்கு எதி​ராக உள்​ளது.

மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: ஆளுநர் மூலம் அரசி​யல் சாசனத்​துக்கு விரோத​மாக நடந்து கொள்​வது, தனது அரசி​யல் நோக்​கத்தை நிறைவேற்​றிக் கொள்​வது என்ற அணுகு​முறையை பாஜக கடைபிடித்து வரு​கிறது.

இதன் தொடர்ச்​சி​யாகவே தவெக தலை​வர் விஜய்யை பதவி​யேற்க அழைக்​காமல் ஆளுநர் காலம் கடத்தி வரு​கிறார். இது ஏற்​புடையதல்ல.

எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலை​யில் தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​றுள்ள விஜய்யை உடனடி​யாக பதவி​யேற்க அழைப்பு விடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், எந்​தவொரு கட்​சி​யும் தனித்து ஆட்சி அமைக்க வழி​வகுக்​கும் தெளி​வான தீர்ப்பை வாக்​காளர்​கள் வழங்​க​வில்​லை. இருப்​பினும் தவெக​வுக்கு 108 இடங்​களை வழங்​கி​யுள்​ளனர்.

இதன் அடிப்​படை​யில் ஆளுநரை சந்​தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி​யுள்​ளார். பதவி​யேற்பு விழாவுக்கு முன்பு பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும் என ஆளுநர் வலி​யுறுத்​து​வது பொருத்​தமற்​றது.

தனிப்​பெரும் கட்​சி​யாக தவெக இருப்​ப​தால், அரசி​யலமைப்​பின்​படி, சட்​டப்​பேர​வை​யில் தனது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுந​ரால் அதற்கு ஒரு வாய்ப்பு வழங்​கப்பட வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பாஜக, அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழக அரசி​யலில் தலை​யீடு செய்து குழப்​பத்தை உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிறார்​கள். தனிப் பெரும் கட்​சி​யாக மக்​களால் தவெக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, விஜய்யை பதவி​யேற்க அனு​ம​திக்க வேண்​டும். அது​தான் அரசி​யல் அமைப்​புச் சட்​டம் காட்​டும் வழி​காட்​டு​தல். ஆனால், ஆதரவு கோரிய நிலை​யில் இது​வரை ஆளுநர் எந்த முடி​வும் எடுக்​காமல் குழப்​பத்தை ஏற்​படுத்த இடம் கொடுக்​கிறார். இது ஏற்​புடையது அல்ல.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இருப்​பது தமிழக மக்​களின் ஆணையை அவம​திப்​ப​தாகும். 233 தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்​கள் இன்​னும் பதவி​யேற்க முடி​யாமல் இருக்​கிறார்​கள்.

இது மாநிலத்​துக்கு நேரும் அவமானம்; மக்​களாட்​சிக்கு ஏற்​படும் சேதம். ‘பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில்​தான் நிரூபிக்க வேண்​டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்​ஆர் பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் தெளி​வாகச் சொல்​லி​யிருக்​கிறது.

இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். மேலும், நடிகர் பிர​காஷ் ராஜ், விஷால் ஆகியோ​ரும் விஜய்க்கு ஆளுநர் வாய்ப்​பளிக்​க வேண்​டும்​ என வலியுறுத்தியுள்ளனர்.

விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்: எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in