கியூரி மருத்துவமனை சார்பில் உறுப்பு தான தினம் விழிப்புணர்வு பேரணி: துரைப்பாக்கத்தில் நடைபெற்றது

கியூரி மருத்துவமனை சார்பில்  உறுப்பு தான தினம் விழிப்புணர்வு பேரணி: துரைப்பாக்கத்தில் நடைபெற்றது
Updated on
1 min read

சென்னை: சென்னை கியூரி மருத்​து​வ​மனை சார்​பில் உறுப்பு தான தினம் விழிப்​புணர்வு பேரணி சென்னை துரைப்​பாக்​கத்​தில் நடை​பெற்​றது.

உலக உறுப்பு தான தினத்​தை​யொட்​டி, சென்னை துரைப்​பாக்​கத்​தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்​றும் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம்) மருத்​து​வ​மனை​யின் சார்​பில் ஒரு​வாரம் கல்​லூரி​களில் மாண​வர்​களிடம், நோயாளி​களிடம் விழிப்​புணர்​வு, உறுப்பு தான உறு​திழொமி இயக்​கம், கையெழுத்து இயக்​கம், ஓவிய போட்​டிகள், சமூக வலை​தளத்​தில் விழிப்​புணர்வு நிகழ்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இறு​தி​யாக, உறுப்பு தான விழிப்​புணர்வு பேரணி நடை​பெற்​றது. கியூரி மருத்​து​வ​மனை​யில் இருந்து 2.6 கிலோமீட்​டர் தூரம் நடந்த பேரணியை மருத்​து​வ​மனை​யின் தலை​வர் மருத்​து​வர் சிவ​ரா​மன், மூத்த சிறுநீரக நிபுணர் மருத்​து​வர் முத்து ஜெய​ரா​மன் ஆகி​யோர் தொடங்கி வைத்​தனர்.

மருத்​து​வர்​கள், சுகா​தார பணி​யாளர்​கள், மாண​வர்​கள், மருத்​து​வ​மனை ஊழியர்​கள், பொது​மக்​கள் என 250-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​று, உறுப்பு தானத்​தின் அவசி​யத்தை மக்​களிடையே எடுத்​துரைத்​தனர்.

கியூரி மருத்​து​வ​மனை​யின் சிறுநீரக துறைத்​தலை​வர் மருத்​து​வர் அஜய் ரத்​தூன், சிறுநீரக நிபுணர் மருத்​து​வர் செ.கு​கன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த ஒரு​வார கால விழிப்​புணர்வு நிகழ்வு என்​பது, இளைஞர்​கள் மற்​றும் பொது​மக்​களிடம் உறுப்பு தானம் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது, பொது​வெளி​யில் நில​வும் தவறான நம்​பிக்​கை​களை நீக்​கு​வது மற்​றும் உறுப்பு தானம் தொடர்​பான தங்​கள் விருப்​பத்தை குடும்​பத்​தினருடன் பகிர்ந்து கொள்ள ஊக்​கு​விப்​பது, ஒரு​வரின் வாழ்க்கை இறுதி அத்​தி​யா​யம் பலரின் வாழ்​வில் ஒளியை ஏற்​படுத்த முடி​யும் என்ற மனிதநேய செய்​தியை மீண்​டும் வலி​யுறுத்​து​வது போன்ற முக்​கிய நோக்​கத்​தை கொண்​டுள்​ளது.

கியூரி மருத்துவமனை சார்பில்  உறுப்பு தான தினம் விழிப்புணர்வு பேரணி: துரைப்பாக்கத்தில் நடைபெற்றது
தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in