தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு

அமைச்சர்களின் பதிலால் காரசார விவாதம்
தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், அவற்றுக்கு அமைச்சர்கள் பலர் அளித்த பதிலால் பேரவையில் நேற்று விவாதம் அனல் பறந்தது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: ஆளுநர் உரை தொடங்கும் போது, இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபை மீறி தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது. இதேபோல் எங்கள் ஆட்சியிலும் ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆனால் எங்கள் தலைவர் உறுதியாக இருந்தார். சட்டப்பேரவை நமது எல்லை. ஆனால் இந்த இடத்தை ஆளுநரிடம் வழங்கும் வகையில் என்ன ‘காம்ப்ரமைஸ்’ நடந்தது என மக்கள் கேட்கிறார்கள். பேரவைத் தலைவர்

ஜேசிடி பிரபாகர்: தாய்த்தமிழ்தான் எங்களுக்கு அடிப்படை. தேசிய கீதத்தை 2 முறை பாடியதில் எந்த தவறும் இல்லை.

உதயநிதி: தேசிய கீதத்தை 2 முறை பாடவைத்த நீங்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை 2 முறை பாட வைத்தீர்களா?

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எங்கள் முதல்வருக்கு உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். ஆளுநருடன் எந்தவிதமாக காம்ப்ரமைசும் எங்களுக்கு கிடையாது.

உதயநிதி: மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். வேளாண் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

தமிழகத்தில் மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், அதில் 100-க்க ம் மேற்பட்டவை சிறுமிகள் மீதான வன்கொடுமைகள். இதனால் நாம் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறோமா என சந்தேகம் வருகிறது.

சிங்கப்பெண் படையினர் குற்றவாளிகளைப் பிடிக்காமல், ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பதிவான குற்றங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர். தூத்துக்குடியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அப்பாவி பெண்ணை, அதே கட்சியினர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் சொல்லி தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எல்லா மேலிடத்துக்கும் தெரியும் என்றும், அமைச்சர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடமும் தெரிவித்ததாக வும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். யார் அந்த மேலிடம்? குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

ஆதவ் அர்ஜூனா: திமுக ஆட்சியில் 2023-ல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. 6 மாதத்தில் பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் நேர்மையான ஆட்சியை முதல்வர் வழங்குவார்.

உதயநிதி: தவெக அரசின் முன்பு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இதையெல்லாம் தீர்க்க முயற்சிக்காமல், அடுத்த கட்சி ஆட்களை இழுக்கும் வேலையைத்தான் நீங்கள் முழு வீச்சில் செய்து வருகிறீர்கள். ஆள் பிடிக்கும் நிர்வாகத்தை விட்டு, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், தாய்மாமன் சீர் போன்ற திட்டங்களை 6 மாதங்களில் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறோம். அதை எப்படி செயல்படுத்துவீர்கள் என முதல்வர் பதில் அளிக்க வேண்டும். தவெகவினர் அரசுப் பள்ளிகளில் குத்து பாடல்களை போட்டு நடனம் ஆடுவதை தடுக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்: அரசு பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு
நிர்வாக வசதிக்காக மாநில நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு: கடந்த திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்திய தவெக அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in