ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்: காவல்துறை புதிய திட்டம்

ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்: காவல்துறை புதிய திட்டம்
Updated on
2 min read

சென்னை: ஆன்​லைன் நிதி மோசடி புகார்​களுக்கு ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ முறையை தமிழக காவல்​துறை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ஆன்​லைன் மோசடி​யில் இழந்த பணத்தை விரை​வாக மீட்​கும் வாய்ப்பு அதி​க​மாகும் என தமிழக காவல்​துறை தெரி​வித்​துள்​ளது.

இன்​றைய டிஜிட்​டல் யுகத்​தில், ஆன்​லைன் பணப் பரிவர்த்​தனை​கள் எவ்​வளவு எளி​தாகி இருக்​கிறதோ, அதே அளவுக்கு இணை​ய​வழி நிதி மோசடிகளும் அதிவேக​மாக அதி​கரித்து வரு​கின்​றன.

சற்று அஜாக்​கிரதை​யாக இருந்​தா​லும், உழைத்​துச் சேர்த்த பணம் நிமிடங்​களில் கொள்​ளை​யடிக்​கப்​படும் அபா​யம் உள்​ளது. சமீப​கால​மாக பகுதி நேர வேலை மோசடி, டிஜிட்​டல் கைது மோசடி, போலிக்கடன் செயலி, யுபிஐ மற்​றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்​வேறு வடிவங்​களில் சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஆன்​லைன் நிதி மோசடி புகார்​களை விரை​வாக பதிவு செய்​து, இழந்த பணத்தை மீட்​கும் நடவடிக்​கைகளை வலுப்​படுத்த, தமிழக காவல்​துறை, ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’ என்ற புதிய திட்​டத்தை அறி​முகப்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து தமிழக காவல்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, 1930 என்ற உதவி எண்​ணுடன் இந்த புதிய வசதி ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. ஆன்​லைன் மோசடி​யில் பணத்தை இழந்​தவர்​கள் உடனடி​யாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்​டும்.

ரூ.1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான நிதி மோசடி புகார்​கள், குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்​காணிப்பு வலை​யமைப்​புடன் தானாகவே ஒருங்​கிணைக்​கப்​பட்டு ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்​’-ஆகபதிவு செய்​யப்​படும்.

பின்​னர், புகார் அளித்​தவருக்​கு, ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’ பதிவு செய்​யப்​பட்ட விவரம் குறுஞ்​செய்​தி​யாக அனுப்​பப்​படும். புதிய சட்ட விதி​களின்​படி, புகார்​தா​ரர் தனது புகாரை உறு​திப்​படுத்த, குறிப்​பிட்ட சைபர் குற்ற காவல் நிலை​யத்​தில் 3 நாட்​களுக்​குள் நேரில் ஆஜராக வேண்​டும். புகார்​தா​ரர் நேரில் ஆஜராகி உறு​திப்​படுத்​தி​யதும், அந்த ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’ சம்​பந்​தப்​பட்ட அதி​கார வரம்​புடைய காவல் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு, வழக்​க​மான எஃப்​ஐஆர்​-ஆக பதி​யப்​படும்.

பிஎன்​எஸ்​எஸ், 2023 பிரிவு 173-ன் கீழ் இந்த முறை செயல்​படுத்​தப்​படு​கிறது. இது அதி​கார வரம்பை பொருட்​படுத்​தாமல் புகார்​களை பதிவு செய்ய வழி​வகை செய்​கிறது. இதனால் சட்ட நடவடிக்​கைகள் தாமதமின்றி உடனடி​யாகத் தொடங்க முடிகிறது. மோசடி நடந்த முதல் சில மணிநேரங்​கள் மிக முக்​கிய​மானவை. இம்​முறை​யி​னால் தகவல்​கள் உடனுக்​குடன் பரி​மாறப்​படு​வ​தால், மோசடி செய்​பவர்​களின் வங்​கிக் கணக்கை விரை​வாக முடக்க முடி​யும்.

டிஜிட்​டல் ஆதா​ரங்​கள் உடனுக்​குடன் பாது​காக்​கப்​படு​வ​தால், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் பணத்தை மீட்​டெடுக்​கும் வாய்ப்பு அதி​கரிக்​கிறது. மேலும், ஒரே தகவலை பலமுறை பதிவு செய்ய வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை. எனவே, இணை​ய​வழி நிதி மோசடி​யால் பாதிக்​கப்​படு​பவர்​கள், எவ்​வித தாமத​மும் இன்றி தேசிய இணைய குற்ற உதவி எண்​ணான 1930-ஐ தொடர்​பு​கொள்​ளுங்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.

ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்: காவல்துறை புதிய திட்டம்
வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in