

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவின் அரசியல் மற்றும் வரலாற்று பயணங்கள் குறித்து அவரே ஆங்கிலத்தில் எழுதிய ‘வைகோ இன் பார்லிமென்ட்’ என்ற நூல் வெளியீட்டு விழாவை, ஆக.4-ம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கு வைகோ அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அடுத்த மாதம் 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வைகோவின் நூலை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி வெளியிட முதல்வர் விஜய் பெற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின்போது மத்திய அமைச்சர்கள் சிலரையும் முதல்வர் விஜய் சந்தித்து தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.