ஆவடி, தாம்பரத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்

பிரேம் ஆனந்த், செந்​தில் குமார்

பிரேம் ஆனந்த், செந்​தில் குமார்

Updated on
1 min read

சென்னை: ஆவடி மற்​றும் தாம்​பரம் காவல் ஆணை​யரகத்​துக்கு புதிய காவல் ஆணை​யர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்​றதை அடுத்து பல்​வேறு துறை​களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட அதி​காரி​கள் மாற்​றப்​பட்டு வரு​கின்​றனர்.

காவல் துறையை பொருத்​தவரை, சட்​டம் - ஒழுங்கு டிஜிபி மற்​றும் உளவுத்​துறை முதல் லஞ்ச ஒழிப்​புத் துறை வரை அதி​காரி​கள் மாற்​றப்​பட்​டுள்​ளனர். சரக டிஐஜி, மாவட்ட எஸ்​.பி.க்​களும் தொடர்ந்து மாற்​றப்​பட்​டு, அவர்​களுக்கு புதிய பணி​யிடம் ஒதுக்​கப்​பட்டு வரு​கிறது.

நிர்​வாக வசதிக்​காக​வும், பொது​மக்​களின் சேவையை மேம்​படுத்​து​வதற்​காக​வும் இந்த மாற்​றங்​கள் செய்​யப்​பட்டு வரு​வ​தாக அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அந்த வகை​யில், ஆவடி காவல் ஆணை​ய​ராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்​பரம் காவல் ஆணை​ய​ராக​வும், டிஜிபி அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் தலை​மை​யிடத்து கூடு​தல் டிஜிபி செந்​தில் குமார் ஆவடி காவல் ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை உள்​துறை செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>பிரேம் ஆனந்த்,&nbsp;செந்​தில் குமார்</p></div>
சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை அமைக்க நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in