நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய ஆலை: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய ஆலை: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்
Updated on
1 min read

சென்னை: புற்​று​நோய் மருந்து தயாரிக்​கப் பயன்​படும் அரிய மண் தாதுக்​கள், நிலக்​கரி சாம்​பலில் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதற்​கான வணிக ரீதியி​லான உற்​பத்தி ஆலை என்​எல்சி மூலம் தமிழகத்​தில் விரை​வில் அமைக்​கப்​படும் என்று மத்​திய நிலக்​கரி, சுரங்​கத் துறை அமைச்​சர் ஜி.கிஷன் ரெட்டி தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முந்​தைய கால​கட்​டங்​களில் டெல்​லி​யில் இருந்து அனுப்​பும் நிதி​யில் ஒரு பகுதி மட்​டுமே ஏழைகளைச் சென்​றடைந்​தது. மோடி அரசின் ஜன்​தன் கணக்​கு​கள், ஆதார் மற்​றும் செல்​போன் இணைப்பு மூல​மாக, இடைத் தரகர்​கள், புரோக்​கர்​கள் ஒழிக்​கப்​பட்​டு, கடந்த 12 ஆண்​டு​களில் சுமார் ரூ.34 லட்​சம் கோடி எவ்​வித ஊழலும் இன்றி நேரடி​யாக ஏழைகளின் வங்​கிக் கணக்​குக்​குச் சென்​றடைந்​துள்​ளது.

காங்​கிரஸ் ஆட்​சி​யில் 70 ஆண்​டு​கள் ஜம்மு காஷ்மீரில் ‘பிரிவு 370’ நீட்​டிக்​கப்​பட்​ட​தால், 42 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் உயி​ரிழந்​தனர். ஒரு நாட்​டுக்கு 2 கொடிகள், 2 அரசி​யலமைப்பு என்ற நிலை இருந்​தது. ஆனால், மத்​திய பாஜக அரசு அதை துணிச்​சலாக நீக்​கி, அம்​பேத்​கரின் அரசி​யலமைப்பை அங்கு முழு​மை​யாக அமல்​படுத்​தி​யுள்​ளது.

கரோனா காலத்​தில் உள்​நாட்​டிலேயே தடுப்​பூசிகளைத் தயாரித்​து, 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​தோம். மத்​திய நிலக்​கரி அமைச்​சகம் கடந்த 3 ஆண்​டு​களில் முதல்​முறை​யாக 1 பில்​லியன் டன்​னுக்​கும் அதி​க​மான நிலக்​கரியை உற்​பத்தி செய்து வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளது. இந்​தியா தற்​போது உலகின் 2-வது மிகப்​பெரிய நிலக்​கரி உற்​பத்​தி​யாள​ராக​வும், 5-வது மிகப்​பெரிய நிலக்​கரி இருப்​பைக் கொண்ட நாடாக​வும் திகழ்​கிறது.

செல்​போன், லேப்​டாப், பாது​காப்பு உபகரணங்​கள் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பங்​களுக்கு மிக அவசி​ய​மான லித்​தி​யம், கோபால்ட் போன்ற முக்​கிய தாதுக்​களை உள்​நாட்​டில் கண்​டறிய​வும், உலக நாடு​களில் உள்ள சுரங்​கங்​களைக் கையகப்​படுத்​த​வும் ரூ.34,000 கோடி ஊக்​கத் தொகை​யுடன் திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அர்​ஜென்​டி​னா​வில் ஏற்​கெனவே 5 லித்​தி​யம் சுரங்​கங்​களை இந்​தியா வாங்​கி​யுள்​ளது. ஆஸ்​திரேலி​யா, சிலி போன்ற நாடு​களு​டன் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது.

நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனத்​தின் (என்​எல்​சி) நிலக்​கரி, லிக்​னைட் எரிப்​புக்கு பிறகு கிடைக்​கும் சாம்​பலில் அரிய மண் தாதுக்​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவை புற்​று​நோய் சிகிச்​சைக்கு பயன்​படுத்​தப்​படு​பவை. இதற்​கான பைலட் திட்​டங்​கள் தற்​போது வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அடுத்த ஓராண்​டுக்​குள் இது இறுதி செய்​யப்​பட்​டு, தமிழகத்​தில் வணிக ரீதி​யான உற்​பத்தி ஆலைகள் அமைக்​கப்​படும். இதன்​மூலம் இந்த அரிய மருந்​துகளை இந்​தி​யா​வுக்கு மட்​டுமன்றி உலக நாடு​களுக்​கும் தமிழகத்​தில்​ இருந்​து வழங்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய ஆலை: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்
“யோகா நம் வாழ்வின் அங்கமாக வேண்டும்” - கொல்கத்தாவில் 30,000 பேருடன் பங்கேற்ற பிரதமர் மோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in