பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
Updated on
1 min read

மதுரை: பிரதமர் மோடி மதுரைக்கு வரு​வதற்கு முன்​பாக, திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

மதுரை​யில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பங்​கேற்​கும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. கடந்த 7 ஆண்​டு​களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்​து​வ​மனை அடிக்​கல் நாட்டு விழா நடை​பெற்ற மண்​டேலா நகர் பகு​தி​யில் இக்​கூட்​டத்தை நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அங்கு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் செல்​லூர் கே.​ராஜு, ஆர்​.பி.உதயகு​மார், வி.​வி.​ராஜன் செல்​லப்​பா, பாஜக மாநில நிர்​வாகி​கள் ராம.சீனி​வாசன், கருப்பு முரு​கானந்​தம், ஏ.பி.​முரு​கானந்​தம், பொன்​.​பால​கணப​தி, சசிகலா புஷ்பா உள்​ளிட்​டோர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

பின்​னர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த தேர்​தலில் ஒரு செங்​கல்லை காட்டி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​ட​வில்லை என உதயநிதி பிரச்​சா​ரம் செய்​தார். தற்​போது எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கம்​பீர​மாக வளர்ந்து நிற்​கிறது.

அதை நினை​வுபடுத்​தும் வகை​யில் இந்த இடம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் முடிந்த பிறகு, திறப்பு விழா குறித்து முடிவு செய்​யப்​படும்.

பிரதமர் மோடி மதுரை வரு​வதற்கு முன்​பாக திருப்​பரங்​குன்​றத்​தில் தீபத் தூணில் தீபம் ஏற்​றி, நீதி​மன்​றத் தீர்ப்பை அரசு நிறைவேற்ற வேண்​டும். அடுத்து ஆட்​சிக்கு வர முடி​யாது என்ற நிலை​யில், அரசு ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யத் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பழனி​சாமி முதல்​வ​ராக இருந்​த​போது தமிழகத்​தில் 11 மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்டு வந்​தார். ஸ்டா​லின் ஒரு மருத்​து​வக் கல்​லூரியை​யா​வது கொண்டு வந்​தா​ரா? கேட்​டால் டப்பா இன்​ஜின் என்​கிறார்​கள்.

தமிழகத்​தில் நடை​பெறு​வது கஞ்சா இன்​ஜி​னா? விஜய்​யுடன் கூட்​டணி சேர முடி​யாமல் போன​தால்​தான் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் நீடிக்​கிறது. திமுக கூட்​டணி பொருந்​தாக் கூட்​ட​ணி. எங்​கள் கூட்​டணி பொருந்​தும் கூட்​ட​ணி. அதி​முகவை விமர்​சிக்க விஜய்க்கு தகுதி இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
எரிசக்தி துறையில் இந்தியா வேகமாக வளர்கிறது: திருவனந்தபுரம் என்ஐஐஎஸ்டி இயக்குநர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in