அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

வாயு கசிவு நடந்த இடத்தில் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்

வாயு கசிவு நடந்த இடத்தில் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்

Updated on
1 min read

சென்னை: திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே தனி​யார் கடல் உணவு பதப்​படுத்​தும் தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட அமோனியா வாயு கசி​வால் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டு, மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வி்த்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், ‘திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டிருப்​பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்​தேன். தங்​களின் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்: விலைம​திப்​பற்ற உயிர்​கள் பறி​போனதும், பல தொழிலா​ளர்​கள் காயமடைந்​ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது. மேலும், சிகிச்​சை​யில் உள்ள அனை​வரும் விரை​வில் குணமடைந்து முழு உடல்​நலம் பெற​வும் பிரார்த்​திக்​கிறேன்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல். இது​போன்ற துயரச் சம்​பவங்​கள், இனி​யும் ஏற்​ப​டா​மல் இருக்க, தொழிற்​சாலைகளில் உரிய பாது​காப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்று ஆய்​வு​களை நடத்த வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: வாயுக் கசி​வால் பாதிக்​கப்​பட்ட பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் நிலை​யில், அவர்​களை காக்க உரிய மருத்​துவ சிகிச்​சைகள் அளிப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை: நச்சு வாயுவை சுவாசித்து பரி​தாப​மாக உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கடந்த சில காலங்​களாகவே தொழில் நடக்​கும் பகு​தி​களில் இது​போன்ற அசம்​பா​விதங்​கள் தொடர்​வதும் அதனால் உயிர்​பலிகள் உண்​டாவதும் அச்​சத்தை ஏற்​படுத்​துகின்​றன.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்து உள்​ளனர்.

<div class="paragraphs"><p>வாயு கசிவு நடந்த இடத்தில் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்</p></div>
“யோகா நம் வாழ்வின் அங்கமாக வேண்டும்” - கொல்கத்தாவில் 30,000 பேருடன் பங்கேற்ற பிரதமர் மோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in