அடிப்படை வசதிகள் இல்லை: கே.கே.நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு கட்டிடங்கள்

அடிப்படை வசதிகள் இல்லை: கே.கே.நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு கட்டிடங்கள்
Updated on
2 min read

சென்னை: கே.கே.நகர் மத்​திய அரசு ஊழியர் குடி​யிருப்​பில் அடிப்​படை வசதி​கள் இன்​றி, கட்​டிடங்​கள் இடிந்து விழும் நிலை​யில் இருப்​ப​தால், அதில் வசிப்​போர் அச்​சத்​துடன் உள்ளனர்.

மத்​திய வீட்டு வசதி மற்​றும் நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் மத்​திய பொதுப் பணித்​துறை சார்​பில், கே.கே.நகர், காம​ராஜர் சாலை​யில், மத்​திய அரசு ஊழியர் குடி​யிருப்பு வளாகம் கடந்த 1970 கால​கட்​டத்​தில் உரு​வாக்​கப்​பட்​டது.

இதில் தரைத்​தளம் மற்​றும் 2 தளங்​கள் என 1,200 குடியிருப்புகள் கொண்ட அடுக்​கு​மாடி குடியிருப்பு கட்​டப்​பட்​டது. இதில், தற்​போது சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வரு​கின்​றனர்.

இந்த வளாக பராமரிப்பு மத்​திய பொதுப்​பணித்​துறை வசம் உள்​ளது. ஆனால், இந்த பகு​தி​யில் அடிப்​படை வசதி​கள் இல்​லை, பராமரிப்பு இல்​லை என அங்கு வசிக்​கும் பொது​மக்​கள் புகார் தெரி​வித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் இடிந்து விழுந்துள்ள வீட்டின் மேற்கூரைகள்.</p></div>

கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் இடிந்து விழுந்துள்ள வீட்டின் மேற்கூரைகள்.

இதுதொடர்​பாக, மத்​திய அரசு ஊழியர் மகா சம்​மேளன முன்​னாள் பொதுச்​செய​லா​ளர் துரை​பாண்​டியன் கூறிய​தாவது: கே.கே.நகர் மத்​திய அரசு ஊழியர் குடி​யிருப்பு வளாக கட்​டிடங்​களில் மேற்​கூரைகள் இடிந்து விழுந்து வரு​கிறது.

கதவு​கள், ஜன்​னல்​கள் உடைந்து தொங்​கு​கின்​றன. இங்​குள்ள குடிநீர் தொட்​டிகள்,கிணறு பராமரிப்​பின்றி அசுத்​த​மாக கிடக்​கின்​றன. இதனால் சுத்​த​மான குடிநீர் கிடைக்​க​வில்​லை. குப்​பைகளை முறை​யாக அகற்​றாத​தால், ஆங்​காங்கே குப்​பைகள் குவியல், குவிய​லாக கிடக்​கின்​றன.

சாலைகள் கரடு முர​டாக பராமரிப்​பின்றி மோச​மான நிலை​யில் உள்​ளன. தெரு விளக்​கு​கள் எரியாததால், சமூக விரோ​தி​கள் இப்​பகு​தியை மது அருந்​து​மிட​மாக பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

இரவு நேரங்​களில் சாலை​யில் விஷப் பூச்​சிகள் சுற்​று​வ​தால், பொது​மக்​கள் அச்​சத்​துடன் செல்ல வேண்​டி​யுள்​ளது. இங்​குள்ள குழந்​தைகள் பூங்கா பராமரிப்​பின்​றி, பயன்​பாடற்று கிடக்​கிறது.

கழி​வுநீர் வெளி​யேற்​றத்​தி​லும் சிக்​கல் உள்​ளது. மழை நீர் வடி​காலில் தூர் வாராத​தால், மழைநீர் விரைந்து வடி​யாமல் குடி​யிருப்பு பகு​தி​யில் தேங்கி மக்​கள் அவதிக்​குள்​ளாகின்​றனர். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்​கும் பகு​தி​யில் பராமரிப்​புக்கு போதிய பணி​யாளர்​கள் இல்​லை.

இருப்​பவர்​களும் ஒப்​பந்த தொழிலா​ளர்​களாக உள்​ளனர். அவர்​களும், பராமரிப்​பில் திறன் பெற்​றவர்​களாக இல்​லை. இதனால், இந்த வளாகத்​தில் வசிக்கு வரும் மக்​கள், உறு​தி​யற்ற கட்​டிடத்​தில், இருள் சூழ்ந்த பகு​தி​யில் அச்​சத்​துடன் வாழ்ந்து வரு​கின்​றனர்.

முறை​யாக பராமரிக்க மத்​திய பொதுப்​பணித் ​துறை அதி​காரி​களிடம் பலமுறை புகார் தெரி​வித்​தும் இது​வரை எந்த நடவடிக்​கை எடுக்​க​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அடிப்படை வசதிகள் இல்லை: கே.கே.நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு கட்டிடங்கள்
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in