“அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதா?” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

“அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதா?” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
Updated on
1 min read

சென்னை: “தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது” என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.

தங்களை தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது. கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதா?” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in