நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரம்: பிரியங்கா காந்தி, அகிலேஷ் மீது வானதி சீனிவாசன் சாடல்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரம்: பிரியங்கா காந்தி, அகிலேஷ் மீது வானதி சீனிவாசன் சாடல்
Updated on
1 min read

கோவை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுகவினருடன் இணைந்து பிரியங்கா, அகிலேஷ் செயல்பட்டுள்ளதன் மூலம் இந்து விரோதிகள் என நிரூபித்துவிட்டதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான கந்தர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை திமுக அரசு செயல்படுத்தவில்லை.

மதுரையில் நடந்த விழாவில், எங்களை எதுவும் செய்ய முடியாது என நீதித் துறை மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்யும் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

இதன் மூலம் பிரியங்கா காந்தி, அகிலேஷ் உள்ளிட்டோர் தாங்கள் இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள், விழாக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்காகன காரணத்தை இருவரும் தெளிவுப்படுத்த வேண்டும். இந்து விரோதிகளான அவர்களுக்கு ஏற்கெனவே அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ள நிலையில் தொடர்ந்து பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரம்: பிரியங்கா காந்தி, அகிலேஷ் மீது வானதி சீனிவாசன் சாடல்
“தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என விஜய் பேசியது உண்மை” - ஹெச்.ராஜா வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in