சபரிமலை தங்கத் தகடு திருட்டு விவகாரம்: 21 இடங்களில் தீவிர சோதனை

சபரிமலை தங்கத் தகடு திருட்டு விவகாரம்: 21 இடங்களில் தீவிர சோதனை
Updated on
1 min read

சென்னை: சபரிமலை தங்​கத் தகடு திருட்டு வழக்கு தொடர்​பாக தமிழகம், கேரளா உள்​ளிட்ட 21 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது.

சபரிமலை கோயி​லில் சுமார் 4 கிலோ தங்​கம் திருடப்​பட்​டது தொடர்​பான வழக்​கில் இது​வரை உன்னிகிருஷ்ணன் போத்​தி, திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர்​கள் வாசு, பத்​மகு​மார், நிர்​வாக அதி​காரி​கள் முராரி பாபு, சுதீஷ்கு​மார் மற்​றும் தந்​திரி கண்​டரரு ராஜீவரரு, சென்னை நகை தயாரிப்பு நிறுவன சிஇஓ பங்​கஜ் பண்​டாரி உள்​ளிட்ட 11 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், தங்​கத் தகடு திருட்​டில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, அமலாக்​கத் துறை​யும் விசா​ரித்​தது. அதன்​படி, இந்த விவ​காரத்​தில் தமிழகம், கேரளா, கர்​நாட​கா​வில் 21 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டது.

சென்​னை​யில் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, வேப்​பேரி, சவுக்​கார்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தீவிர சோதனையில்​ ஈடுபட்​டனர்​.

சபரிமலை தங்கத் தகடு திருட்டு விவகாரம்: 21 இடங்களில் தீவிர சோதனை
கடலோர பகுதிகளில் 23, 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in