சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து தரவுகள் ஒருங்கிணைப்பு

புதிய திட்டம் வகுத்துள்ளதாக ‘கும்டா’ அதிகாரிகள் தகவல்
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து தரவுகள் ஒருங்கிணைப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னையின் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்க, போக்​கு​வரத்து மற்​றும் சாலை அமைப்​பு​களின் தரவு​களை ஒருங்​கிணைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழும அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை நகரின் மிக முக்​கிய பிரச்​சினை​களில் ஒன்​றாக போக்குவரத்து நெரிசல் இருந்து வரு​கிறது. வாக​னங்​கள் அதி​கள​வில் இருப்​ப​தால் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது என்​றாலும், நகரில் மேற்​கொள்​ளப்​படும் உள்​கட்​டமைப்பு பணி​கள் காரண​மாக​வும் நெரிசல் அதிகரிக்கிறது.

இந்த பிரச்​சினைக்கு துறை​களிடையே ஒருங்​கிணைப்பு இல்​லாதது முக்​கிய காரணம் என்ற குற்​றச்​சாட்டு நில​வு​கிறது.

இந்​நிலை​யில், சென்னை மாநகரச் சாலைகளில் நில​வும் குழப்​பங்​கள் மற்​றும் போக்​கு​வரத்து நெரிசலை சரி செய்​யும் வகை​யில், நகரத்​தின் போக்​கு​வரத்து, சாலை அமைப்​பு​கள் குறித்ததரவு​களை ஒருங்​கிணைக்க, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​காக, ரூ.146.7 கோடி செல​வாகலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் முக்​கிய துறை​களான மெட்ரோ ரயில், மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், குடிநீர் வாரி​யம், காவல் ​துறை மற்​றும் மின்​வாரி​யம் உள்​ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட அரசுத் துறை​களின் தரவு​களை இணைத்​து, ஒரே வலை​யமைப்​பின் கீழ் கொண்டு வர, தனி​யார் ஆலோ​சனை நிறு​வனம் விரி​வான திட்ட அறிக்​கை​யைத் தயாரித்​துள்​ளது.

முதலில் நகரின் பழைய மற்​றும் மையப் பகு​தி​களில் தொடங்​கப்​பட்​டு, பின்​னர், சென்னை மாநகர் முழு​வதும் இது விரிவுபடுத்​தப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்​து, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழும அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த திட்​டத்தை உரு​வாக்​கு​வதற்கு முன், சம்​பந்​தப்​பட்ட 31 துறை​களு​ட​னும் ஆலோ​சனை​கள் நடத்​தப்​பட்​டன. மேலும், இதே போன்​றதொரு அமைப்பை ஆய்வு செய்​வதற்​காக எங்​கள் அதி​காரி​கள் சிங்​கப்​பூர் சென்று ஆய்வு செய்​தனர்.

வரைபடங்​கள், சாலை விவரங்​கள், குடிநீர் மற்​றும் மின் இணைப்​பு​கள் அமைந்​துள்ள இடங்​கள், பொதுப் போக்​கு​வரத்து வழிகள் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய 6 கூறுகளைக் கொண்ட தரவு தளமாக இது செயல்​படும்.

இதனுடன் துறை​கள் இணைந்து உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களைத் திட்​ட​மிட​வும், கண்​காணிக்​க​வும் உதவும் ஒருங்​கிணைப்​புக் கரு​வி​யும் இடம்​பெறும். இதனால், துறை​களுக்​கிடையே​யான முரண்​பாடு​களைத் தானாகவே கண்​டறிவது மற்​றும் போக்​கு​வரத்து காவல் துறை​யின் ஒப்​புதல்​களை ஒரே அமைப்​பின் மூலம் பெறு​வது போன்ற பல்​வேறு அம்​சங்​களை ஒருங்​கிணைக்க இந்த அமைப்பு உதவும்.

மேலும், இந்த புதிய தளம் ஏற்​கெ​னவே உள்ள துறை​சார் அமைப்​பு​களுக்​குப் பதிலாகவோ அல்​லது அதன் நகலாகவோ செயல்​ப​டாது. மாறாக, தற்​போதுள்ள தரவு​களு​டன் இணைக்​கப்​படும் வகை​யிலேயே இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விரி​வான திட்ட அறிக்​கை​யின் இறுதி வரைவு அடுத்த வாரம் ஆய்​வுக் குழு​வில் வி​வா​திக்​கப்​பட்​டு, அதன் பிறகு மாநில அரசிடம்​ சமர்ப்​பிக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து தரவுகள் ஒருங்கிணைப்பு
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் சென்னை, கோவை வந்தன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in