எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் என்ன செய்வார்?

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் என்ன செய்வார்?
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும்.

தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்த கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்​றிருக்​காத நிலை​யில், ஜனநாயக முறைப்​படி அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு​கள் 163 மற்​றும் 164-ன்​படி தமிழக ஆளுநர் 4 வழி​முறை​களைக் கையாண்டு அரசி​யல் கட்​சிகளை ஆட்​சி​யமைக்க சட்ட ரீதி​யாக அழைப்பு விடுக்​கலாம்.

அதன்​படி தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாகச் சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம். அதிக இடங்​களைக் கைப்​பற்​றிய கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அக்​கட்​சியை அழைக்​கலாம். தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அழைக்​கப்​படலாம்.

பெரும்பான்மை அவசியம்

வெளியி​லிருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம். இந்த வழி​முறை​களின்​படி ஆட்​சி​யமைக்​கப்​படும் பட்​சத்​தில், சம்​பந்​தப்​பட்ட கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக தேர்​வானவர் முதல்​வ​ராக நியமிக்​கப்​படலாம்.

அதன்​பிறகு அந்த கட்​சி​யின் முதல்​வர் அரசி​யலமைப்பு சட்​டப்​பிரிவு 174-ன்​படி எஸ்​.ஆர்​. பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் கடந்த 1994-ல் பிறப்​பித்த தீர்ப்​பின் அடிப்​படை​யில் அந்த கட்சி சார்​பில் சட்​டப்​பேர​வையைக் கூட்​டு​வார். சட்​டப்​பேர​வை​யில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும்.

அந்த கட்சி தனிப்​பெரும்​பான்​மைக்​கான பலத்​தை, அதாவது 118 உறுப்​பினர்​களின் ஆதரவு தங்​களுக்கு இருக்​கிறது என்​பதை நிரூபித்​து​விட்​டால் அந்த ஆட்சி எந்​தவொரு பிரச்​சினை​யும் இன்றி தொடரும்.

ஒரு​வேளை அந்​தக் கட்​சி​யால் பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அதற்கு அடுத்த இடத்​தில் உள்ள கட்சி ஆட்​சி​யமைக்​கும் வகை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்​பு​விடுப்​பார்.

அதன்​படி அந்​தக் கட்சி தங்​களது பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​து​விட்​டால் அந்த கட்சி ஆட்​சி​யமைக்​கும். இரண்​டாவ​தாக அழைக்​கப்​பட்ட கட்​சி​யும் ஆட்​சி​யமைக்க முடி​யா​விட்​டால் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பிரிவு 356-ன்​படி குடியரசுத் தலை​வர் ஆட்சி பிரகடனப்​படுத்​தப்​படும். அதன்​பிறகு மீண்​டும் புதி​தாக தேர்​தல் நடத்​தப்​படும்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் என்ன செய்வார்?
தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்! - விசில் புரட்சி மூலம் திமுக ஆட்சியை வீழ்த்தியது தவெக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in