ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்க திட்டம்?

ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்க திட்டம்?
Updated on
1 min read

ஊட்டி: பிரசித்​திபெற்ற ஊட்டி மலர் கண்​காட்​சியை முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. மலர் கண்​காட்​சிக்​கான ஆயத்​தப் பணி​கள் வேக​மாக நடந்து வருகின்​றன.

நீல​கிரி மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை​விழா​வின்​போது, காய்​கறி கண்​காட்​சி, வாசனை திர​விய கண்​காட்​சி, ரோஜா காட்​சி, மலர் கண்​காட்​சி, பழக்​காட்சி ஆகியவை நடை​பெறும். இந்​தாண்டு 128-வது மலர் கண்​காட்​சிக்​காக சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 275 வகை​யான மலர் விதைகள் மற்​றும் செடிகள் ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி மற்​றும் நெதர்​லாந்து ஆகிய நாடு​களி​லிருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும் பெறப்​பட்​டன. இதன்​மூலம் மலர் செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்டு, பூங்​கா​வில் பல்​வேறு பகு​தி​களில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது, மலர் செடிகளில் மலர்​கள் பூத்து குலுங்​கு​கின்​றன.

மலர் கண்​காட்​சிக்​கான தேதி இன்​னும் அறிவிக்​கப்​பட​வில்​லை. கடந்த காலங்​களில் மலர் கண்​காட்​சியை முதல்​வர்​களாக இருந்த ஜெயலலி​தா, பழனி​சாமி, மு.க.ஸ்​டா​லின் ஆகியோர் தொடங்​கி​ வைத்​துள்​ளனர்.

இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் கோடை விழா குறித்த அறி​விப்பு எது​வும் வெளி​யிடப்​பட​வில்​லை. அதே​நேரம், ஊட்​டி​யில் மலர் கண்​காட்​சி, குன்​னூரில் பழக்​காட்சி மட்​டும் நடத்த தோட்​டக்​கலைத்​துறை முடிவு செய்​துள்​ளது.

தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்று நடக்​கும் முதல் அரசு நிகழ்ச்சி என்​ப​தால், ஊட்டி மலர் கண்​காட்​சியை தொடங்​கி வைப்​ப​தற்​காக, முதல்​வர் விஜய்யை அழைக்க தோட்​டக்​கலைத் துறை​யினர் முடிவு செய்​துள்​ளனர். ஆனால், அதி​காரப்​பூர்​வ​மாக இது வரை எவ்​வித அறி​விப்​பும் வரவில்​லை.

முதல்​வர் ஊட்டி மலர் கண்​காட்​சி​யில் பங்​கேற்க சம்​மதம் தெரிவிக்​கும் பட்​சத்​தில், அவசரக​தி​யில் ஏற்​பாடு​களை செய்ய முடி​யாது என்​ப​தால், அதற்​கான ஆயத்​தப் பணி​கள் ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் தற்​போதே தொடங்​கப்​பட்​டுள்​ளன. மேடை, அரங்​கு​கள் மற்​றும் சிறப்பு அலங்​காரங்​கள் அமைக்​கும் பணி​கள் தீவிரமாக நடந்து வரு​கின்​றன.

இந்​தாண்டு சிறப்​பம்​ச​மாக மகாபலிபுரம் கடற்​கரை கோயில், இருவாச்சி பறவை, படகு உள்​ளிட்ட அலங்​காரங்​கள் மேற்​கொள்ளப்பட உள்​ளன.

ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்க திட்டம்?
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in