பட்டாசு விபத்து தடுப்பு பரிந்துரைகளை தர வேண்டும்: ஆட்சியர், எஸ்பிக்கு ஐகோர்ட் உத்தரவு

பட்டாசு விபத்து தடுப்பு பரிந்துரைகளை தர வேண்டும்: ஆட்சியர், எஸ்பிக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலைகளில் விபத்​துகளை தடுப்​பது தொடர்​பான பரிந்​துரைகளை மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் வழங்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவ​காசி பட்​டாசு ஆலை விபத்து பாது​காப்பு நடவடிக்கை தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2014-ல் தாமாக முன்​வந்து பதிவுசெய்த வழக்கு நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மாவட்ட சட்​டப்​பணி​கள் குழுத் தலை​வர் தரப்​பில், நீதி​மன்ற உத்​தர​வுபடி ஆக. 6-ல் விருதுநகர் மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு கூட்​டம் நடத்​தப்​பட்​டது. இதில் பல்​வேறு துறை​களைச் சேர்ந்த அதி​காரி​கள் பரிந்​துரைகளை தெரி​வித்​தனர். விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தரப்​பில் பரிந்​துரைகள் வழங்​கப்​பட​வில்லை எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், விபத்​துகளைத் தடுக்க தேவை​யான பரிந்​துரைகளை ஆட்​சி​யரும், காவல் கண்​காணிப்பாளரும் மாவட்ட சட்​டப்​பணிகள் ஆணைக்​குழு தலைவரிடம் வழங்க வேண்​டும். அதுகுறித்து ஆணைக்​குழு தலை​வர் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தரவிட்​டனர்​.

பட்டாசு விபத்து தடுப்பு பரிந்துரைகளை தர வேண்டும்: ஆட்சியர், எஸ்பிக்கு ஐகோர்ட் உத்தரவு
அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் ஆக. 21-க்கு தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in