

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம் நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தவெகவில் சேரப்போவதாக வெளியான தகவலையடுத்து, காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்த டி. செல்வத்தை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், விஜய் முன்னிலையில் டி.செல்வம் நேற்று தவெகவில் இணைந்தார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய டி.செல்வம், “தவெகவுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி நினைத்தார். ஒருசிலரின் சுயநலத்துக்காக காங்கிரஸை திமுகவிடம் அடகு வைத்திருக்கிறார்கள். திமுக வுடன் கூட்டணி வைத்ததை பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்றார்.