

சென்னை: “ஆயுதம் ஏந்திப் போராடி தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி” என்று புகழாரம் சூட்டியுள்ள தவெக தலைவர் விஜய், வேலு நாச்சியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி. சமூக சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்.
எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்’ எனத் தெரிவித்தார்.