ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை - மாணவர் தற்கொலை முயற்சி

போலீஸார் தீவிர விசாரணை
ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை - மாணவர் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

காஞ்சிபுரம்: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​யில் மாணவி ஒரு​வர் ஏற்​கெனவே தற்​கொலை செய்து கொண்ட நிலை​யில், மாணவர் ஒரு​வர் தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார்.

ஸ்ரீபெரும்​புதூர் அருகே தனி​யார் பொறி​யியல் கல்​லூரி இயங்கி வரு​கிறது. இந்​தக் கல்​லூரி​யில் பூந்​தமல்​லியைச் சேர்ந்த டேவிட் மகள் ஷெரின் (19) படித்து வந்​துள்​ளார். கடந்த 2-ம் தேதி வழக்​கம்​போல் கல்​லூரிக்கு வந்த இவர், 5-வது மாடியி​லிருந்து திடீரென குதித்து தற்​கொலை செய்து கொண்​டார்.

இதே​போல் இக்​கல்​லூரி​யில் படித்து வரும் திரு​வொற்​றியூர் பிரபு மகன் சசிதரன் (19) என்ற மாணவரும் நேற்று முன்​தினம் முதல் மாடியி​லிருந்து குதித்து தற்​கொலைக்கு முயன்​றார். இதில் அவரது கை, கால்​களில் எலும்பு முறிவு ஏற்​பட்​டுள்​ளது.

இவர் போரூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அடுத்​தடுத்து நிகழ்ந்த இச்​சம்​பவங்​களால் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. கல்​லூரி​யில் மாணவ, மாணவி​களுக்​குக் கடுமை​யான நெருக்​கடிகள் கொடுக்​கப்​படு​கிறதோ என்​கிற ரீதி​யில் சமூக வலை​தளங்​களில் பல்​வேறு கருத்​துகள் பகிரப்​பட்​டன.

இந்​தச் சம்​பவங்​களைத் தொடர்ந்​து, கல்​லூரிக்கு மறு அறி​விப்பு வரும் வரை விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இரு சம்​பவங்​கள் குறித்து ஸ்ரீபெரும்​புதூர் காவல்​துறை​யினர் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். காஞ்​சிபுரம் எஸ்​.பி. அரவிந்த் தலை​மை​யில் நேரடி விசா​ரணை நடை​பெற்​றது. கல்​லூரிப் பேராசிரியர்​கள் மற்​றும் மாணவர்​களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

இது தொடர்​பாக எஸ்​.பி.அரவிந்த் கூறுகை​யில், “முதற்​கட்ட விசா​ரணை​யில், மாணவி ஷெரின் குடும்​பப் பிரச்​சினை காரண​மாகவே தற்​கொலை செய்​து​கொண்​டது தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக அவர் கடிதம் ஒன்​றை​யும் எழுதி வைத்​துள்​ளார்.

மாணவர் சசிதரனின் தற்​கொலை முயற்​சிக்​கான முழு​மை​யான காரணம் இது​வரை தெரிய​வில்​லை. தற்​போது அவர் சிகிச்​சை​யில் உள்​ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்​லை. வி​சா​ரணை தொடர்ந்​து நடை​பெறுகிறது” என்​றார்.

ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை - மாணவர் தற்கொலை முயற்சி
கேரளாவில் சாலை விபத்து: திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in