

மதுரை அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்.
மதுரை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவ சாயிகளிடம் இருந்து இடைத் தரகர்களை தவிர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக் கப்பட்டுள்ளது.
இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் ஒரு மூட்டைக்கு (40.580 கிலோ) ஆதரவு விலை தற்போது ஏ கிரேடு ரக நெல் குவின்டா லுக்கு ரூ.2,545, பொது ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2,500 நிர்ணயித்துள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. குறுவை (அக்டோபர் - டிசம்பர்), சம்பா (ஜனவரி - ஜூலை) ஆகிய அறுவடை பருவங்களில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய, அருகில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுக லாம் அல்லது முன்பதிவு மற்றும் விவரங்களை அறிய மின்னணு நேரடி கொள்முதல் மையத்தின் www.tncsc-edpc.tn.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடலாம்.
மதுரை மாவட்டத்தில் சுமார் 48 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விவசாயி அய்யாக்கண்ணு கூறுகையில், நேரடி கொள்முதல் நிலையங் களில் வெயில் காலத்தில் விவசாயிகள் தங்கள் நெல்லை உலர வைத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
ஆனால், மழைக்காலத்தில் நெல்லை உலரவைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இக்கால கட்டங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தினால் வசதியாக இருக்கும்.
இதற்கு, அரசு நெல் உலர வைக்கும் இயந்திரங்களை கையாண்டால் இந்த பிரச்சினை இருக்காது. நெல் மூட்டை எடை போட கூலி யாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 10 வழங்குகிறது.
இந்த கூலி போது மானதாக இல்லாத காரணத் தால் அவர்கள் விவசாயி களிடம் கூடுதல் தொகை ரூ.60 வரை வசூலிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே, இதை அரசு கருத்தில் கொண்டு, நெல் மூட்டை எடை போடும் தொழி லாளிக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வழங்கினால், விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலிப்பது தடுக்கப்படும்.
சில நேரங்களில் நெல் கொள் முதல் செய்யப்பட்டு 50 நாட் களுக்கு மேலாகியும் விவசாயி களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வராததால், அடுத்தடுத்த விவசாயப் பணிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதையெல்லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நலனை பாது காக்க வேண்டும் என அவர் கூறினார்.