அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு

அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: மெரினா கடலில் குளிக்​கும் போது, அலை​யில் இழுத்து செல்​லப்​பட்ட தம்​பியை காப்​பாற்​றும் முயற்​சி​யில் உயி​ரிழந்த அண்​ணனின் உடல் கரை ஒதுங்​கி​யது.

ஆவடி, கோவில்​ப​தாகை​யைச் சேர்ந்​தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்​கள் சுதர்​சன் (16), கமலேஷ் (15) ஆகியோ​ருடன் மெரினா கடற்​கரைக்கு வந்​தார். கண்​ணகி சிலை பின்​புற​முள்ள கடலில் சகோ​தரர்​கள் இரு​வரும் குளித்​துக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, திடீரென எழுந்த ராட்சத அலை​யில் தம்பி கமலேஷ் சிக்கி உள்​ளார். இதனைக் கண்ட அண்ணன் சுதர்​சன், தம்பி கையைப் பிடித்து இழுத்து காப்​பாற்​றிய நிலை​யில், எதிர்​பா​ராத வித​மாக கடல் அலை​யில் சிக்கி இழுத்​துச் செல்​லப்​பட்​டுள்​ளார்.

தகவல் அறிந்​து, மெரினா போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து சுதர்​சனை தேடினர். மேலும், மீனவர்​கள் உதவி​யுடன் படகில் சென்​றும் தேடு​தல் பணி நடந்​தது. கடலோர காவல் குழு​மத்​தினரும் தேடினர்.

இந்​நிலை​யில், சிறு​வனின் உடல் நேற்​று​முன்​தினம் இரவு துறை​முகம் பகு​தி​யில் கரை ஒதுங்​கியது. போலீ​ஸார், உடலை பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர்.

அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு
அடகுவைக்க வந்த விவசாயிகளிடம் 12 பவுன் நகை பெற்று மோசடி: கூட்டுறவு ஊழியர்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in