தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழு​வதும் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழு​வதும் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழகம் முழு​வதும் இன்று கருப்​புக் கொடி போராட்​டம் நடத்​தப்பட உள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார்.

தொகுதி மறு​வரையறைக்கு திமுக தலை​வரும் தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறார். இதுகுறித்து ஆலோ​சிக்க ஸ்டா​லின் தலை​மை​யில் திமுக எம்​.பி.க்​களின் அவசர ஆலோ​சனை கூட்​டம் காணொலிக் காட்சி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் மக்​களவை​யில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதிர்ப்பை எவ்​வாறு பதிவு செய்​வது, இந்த விவ​காரத்​தில் தென் மாநிலங்​களில் உள்ள கட்​சிகளிடம் ஆதரவு பெறு​தல் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது. தொடர்ந்து திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னும் ஸ்டா​லின் காணொலிக் காட்சி மூல​மாக ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘தொகுதி மறு​வரையறை சட்​டத் திருத்​தம் தமிழகத்​துக்​கும், தென் மாநிலங்​களுக்​கும் இழைக்​கப்​படும் மாபெரும் வரலாற்று அநீ​தி. பாஜக நெருப்​போடு விளை​யாடு​கிறது. இதற்கு எதி​ராக தமிழகம் முழு​வதும் வீடு​களி​லும், பொது இடங்​களி​லும் கருப்​புக் கொடி ஏற்​றும் போராட்​டம் இன்று ஏப்​.16-ம் தேதி நடத்​தப்​படும். தமிழகத்​தின் குரலை மதித்து மத்​திய அரசு பின்​வாங்​க​வில்லை எனில், அதற்​கான விளைவு​களை சந்​திக்க வேண்டியிருக்கும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இதே​போல், மற்​றொரு எக்ஸ் தளப் பதி​வில் ஸ்டா​லின் கூறி​யுள்​ள​தாவது: சட்​டத் திருத்​தம் கொண்டு வந்து நாடாளு​மன்​றத்​தில் தமிழகத்​தின் குரலை ஒடுக்​கப் பார்க்​கின்​றனர். புதிய சட்​டத்​தால் வட மாநிலங்​களுக்​கும் தென் மாநிலங்​களுக்​கு​மான உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை வேறு​படும்.

மக்​கள் தொகையைக் கட்​டுப்​படுத்​தி​யதற்​காகத் தென் மாநிலங்​களுக்கு தண்​டனையா இது? தேச நலனுக்​காக நாங்​கள் துணை நின்​றால், எங்​களின் அரசி​யல் உரிமை​யையே பறிப்​பீர்​களா? பிரதமர் மோடி, தமிழர்​களை​யும், தென் மாநில மக்​களை​யும் இரண்​டாம் தர குடிமக்​களாக்​கவே பார்க்​கிறார். மக்​கள் தொகை அடிப்​படை​யில் தொகு​தி​களை முடிவு செய்​யக் கூடாது. எட்டு கோடி தமிழர்​களின் ஒற்​றைக் கோரிக்கை இது. அரசி​யல் எல்​லைகளைக் கடந்​து, தமிழகத்​தின் உரிமையை காக்க தமிழகமே ஓங்கி ஒலிக்​கட்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக போராட்​டத்​துக்கு தமிழகக் காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர்​ மு.வீர​பாண்​டியன்​ உள்​ளிட்​ட தலை​வர்​கள்​ ஆதர​வு தெரிவித்​துள்​ளனர்​.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழு​வதும் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in