நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது

இண்டியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது
Updated on
2 min read

புதுடெல்லி: தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறைவேற்ற நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டம் இன்று கூடு​கிறது. மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகள், தொகுதி மறு​வரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

நாடாளு​மன்ற மக்​களவை​யில் தற்​போது 543 எம்​.பி.க்​கள் உள்ளனர். நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த மத்​திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்​காக மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்ணிக்​கையை 816-ஆக உயர்த்துவது, தொகுதி மறுவரையறை மசோ​தாவை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் இன்று (ஏப்​ரல் 16) தொடங்கி ஏப்​.18-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்கு இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் இந்த வேளை​யில் நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தொடர் நடத்த கூடாது. இதை தள்​ளிவைக்க வேண்​டும் என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சி​யினர் கூறிவந்​தனர். எனினும், திட்​ட​மிட்​டபடி இன்று நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்தில் விவாதம் நடை​பெறுகிறது.

இதுதொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டத் தொடரில் மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 543-ல் இருந்து 816 ஆக அதி​கரிக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்ற திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மகளிர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை முன்​கூட்​டியே அமல்​படுத்த முடி​யும். மேலும், தொகுதி மறு​வரையறை மசோ​தா​வும் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி மக்​களவை​யில் மூன்​றில் ஒரு பகுதி இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கப்பட வேண்​டும். புதிய மசோ​தாக்​களின்​படி மக்​கள​வைத் தொகு​தி​களின் இடங்​கள் 816 ஆக அதி​கரிக்​கும். இதில் 273 இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கப்​படும்.

மக்​களவை இடங்​களை அதி​கரிக்​க​வும், மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​த​வும் அரசி​யலமைப்பு (131-வது திருத்​தம்) 2026, தொகுதி மறு​வரையறை மசோ​தா, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்​தம்) 2026 ஆகிய 3 மசோ​தாக்​களை மத்​திய அரசு அறி​முகம் செய்​ய​வுள்​ளது. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவித்தன.

ஆனால், நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத் தொடரை கூட்​டு​வதற்​கும் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்​கும் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

இதுதொடர்​பாக டெல்​லி​யில் நேற்று இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளின் தலைவர்கள் ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர்.

கூட்​டத்​துக்​குப் பின்​னர் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாங்​கள் அனை​வரும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவுக்கு ஆதர​வாக இருக்​கிறோம். ஆனால், அவர்​கள் அந்த மசோ​தாவைக் கொண்டு வரும் விதத்​தில் எங்​களுக்கு பலவித சந்​தேகங்​கள் உள்​ளன. இது அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​ட​தாக உள்​ளது.

மகளிர் இடஒதுக்​கீடு, தேசிய அளவி​லான தொகுதி மறு​வரையறை மற்​றும் மக்​களவை இடங்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்பு என மூன்று தனித்​தனி விவ​காரங்​கள் இருக்​கின்​றன. மக்​களின் மனதில் குழப்​பத்தை ஏற்​படுத்​தும் நோக்​கில் அரசு இவற்றை வேண்​டுமென்றே ஒன்​றோடொன்​று கலக்​கிறது.

மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை ஆதரித்து வந்​தா​லும், அதில் திருத்​தங்​கள் செயல்​படுத்​தப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்தி வரு​கிறோம். அவர்​கள் தொகுதி மறு​வரையறை விஷ​யத்​தில் சில தந்​திரங்​களைச் செய்​கின்​றனர்.

அனைத்​துக் கட்​சிகளும் ஒன்​று​பட்டு நாடாளு​மன்​றத்​தில் போராட வேண்​டும். நாங்​கள் இந்த தொகுதி மறு​வரையறை மசோ​தாவை எதிர்ப்​போம். ஆனால் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்கு நாங்​கள் எதி​ரானவர்​கள் அல்ல. மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா​வில் திருத்​தங்​கள் கொண்டு வந்து அதை நாடாளு​மன்​றத்​தில் விவா​திக்க வேண்​டும். அதே​நேரத்​தில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை இண்​டியா கூட்​டணி எதிர்க்​கும். இவ்​வாறு கார்கே கூறி​னார்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ், சமாஜ்வா​தி, திமுக, ஆம்​ ஆத்​மி உள்​ளிட்​ட கட்​சிகள்​ பங்​கேற்​றன.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவைக் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு பிஆர்எஸ் கட்சி ஆதரவை அளிக்கும். ஆனால், அதை தொகுதி வரையறை மசோதாவுடன் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.

மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. உடனடியாக மகளிர் இடஒதுக்கீட்டை அங்கு அமல்படுத்துங்கள். அதுபோலவே, தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்கள் உள்ளன. இங்கும் அதை அமல்படுத்துங்கள். இடங்களை அதிகரிப்பதையும், தொகுதி மறுவரையறையையும் இணைத்து ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். இவ்வாறு கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது
‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in