திருவிக நகரில் ரவுடிகளை இறக்கி பணப்​ பட்டுவாடா: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மீது திமுக வேட்பாளர் புகார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: திருவிக நகர் தொகு​தி​யில் ரவுடிகளை இறக்கி பணப்​ பட்​டு​வாடா செய்​த​தாக பொற்கொடி ஆம்​ஸ்ட்​ராங் மீது திமுக வேட்​பாளர் புகார் மனு அளித்​துள்​ளார்.

திருவிக நகர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங், வெளியூர்​களில் இருந்து ரவுடிகளை இறக்கி வாக்​காளர்​களை மிரட்​டு​வ​தாக​வும், போலி டோக்​கன்​கள் மற்​றும் பணம் விநி​யோகித்து தேர்​தல் நடத்தை விதி​களை மீறு​வ​தாக​வும் குற்​றம்​சாட்​டி, அத்​தொகு​தி​யின் திமுக வேட்​பாளர் கே.எஸ்​.ர​விச்​சந்​திரன் இந்​திய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் சென்னை காவல் ஆணை​யர் ஆகியோ​ருக்கு புகார் மனு அளித்​துள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: திருவிக நகர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங், தேர்​தல் நடத்தை விதி​களை முற்​றி​லு​மாக மீறி செயல்​பட்டு வரு​கிறார்.

குறிப்​பாக வெளி மாவட்​டங்​களி​லிருந்து ரவுடி கும்​பலை தொகு​திக்​குள் இறக்​கி, அவர்​கள் மூலம் மற்ற வேட்​பாளர்​களை பிரச்​சா​ரம் செய்​ய​வி​டா​மல் மிரட்டியதுடன், பெரம்​பூர் பாரதி நகரில் உள்ள திருமண மண்​டபத்​தில் இந்த வெளியூர் நபர்​களை தங்​க​வைத்​து, அங்​கிருந்து பொது​மக்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்து வரு​கிறார்.

அதி​முக வேட்​பாளர் தரப்​பில் 71, 72-வது வார்​டு​களில் வாக்​காளர் குடும்​பங்​களுக்கு மாதந்​தோறும் ரூ.10 ஆயிரம் மற்​றும் குல​விளக்கு திட்​டத்​தின் கீழ் ரூ.2 ஆயிரம் வழங்​கப்​படும் என அதி​முக சின்​னம் அச்​சிடப்​பட்ட போலி செக் டோக்​கன்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு மக்​கள் தவறாக வழிநடத்​தப்​படு​கிறார்​கள்.

தண்​ணீர் குடங்​கள் மூல​மாக ரகசி​ய​மாக பணப்​பட்​டு​வாடா நடை​பெற்​றுள்​ளது. நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்ள தனது கணவர் மரண வழக்கை பயன்​படுத்​தி, தனது 3 வயது குழந்​தை​யுடன் பிரச்​சா​ரம் செய்து பெண் வாக்​காளர்​களிடம் அதி​முக வேட்​பாளர் அனு​தாபம் தேட முயல்​கிறார்.

அதே​போல் தொகுதி முழு​வதும் பொது இடங்​கள், மின்​சா​ரப் பெட்​டிகள் மற்​றும் அரசு சுவர்​களில் தேர்​தல் ஆணை​யத்​தின் அனு​ம​தி​யின்றி போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. பிரச்​சா​ரத்​துக்கு உரிய அனு​ம​தி​யின்றி வெளி​மாவட்ட வாக​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

திருவிக நகர் தொகு​தி​யில் தேர்​தல் நேர்​மை​யாக​வும், சுதந்​திர​மாக​வும் நடை​பெறு​வதை உறுதி செய்ய, அடுத்த 48 மணி நேரத்​துக்​குள் தொகு​தி​யில் தங்​கி​யிருக்​கும் வெளியூர் நபர்​களை​யும், ரவுடிகளை​யும் அப்​புறப்​படுத்த வேண்​டும். அதி​முக வேட்​பாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழக தேர்தல்: வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிய சிறப்பு வழிமுறைகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in