கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட டிஜிபி உத்தரவு

கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட டிஜிபி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டாத வகை​யில், அரசி​யல் தலை​வர்​களின் பிரச்​சா​ரத்தை முன்​கூட்​டியே திட்​ட​மிட வேண்​டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதி​காரி​களுக்​கும் டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் தமிழகம் முழு​வதும் உள்ள மண்டல ஐஜி-க்​கள், காவல் ஆணை​யர்கள், டிஐஜி-க்​கள், எஸ்​பிக்​களு​டன் காணொலி வாயி​லாக ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது, தங்​களது உயர் அதி​காரி​கள் பிறப்​பித்த உத்​தர​வு​களை மட்​டுமே பின்​பற்ற வேண்​டும்.வெளியி​லிருந்து வரும் தலை​யீடு​களை தவிர்க்க உத்​தரவிட்டார். இதற்​கிடையே, தேர்​தல் பாது காப்பு தொடர்​பாக சுற்​றறிக்கை அனுப்பியிள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

அதில், நட்​சத்​திர அரசி​யல் தலை​வர்​களின் பரப்​புரை, மக்​கள் பாது​காப்பு குறித்து முன்​கூட்​டியே திட்​ட​மிட வேண்​டும், சுவிதா இணை​யதளம் வாயி​லாக பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி கேட்​பவர்​களுக்கு உரிய நேரத்​தில் அனு​மதி கிடைக்​கிற​தா என்​பதை கண்​காணித்து பிரச்​சா​ரம் மற்​றும் பொதுக்​கூட்​டத்​துக்​கான பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும், வேட்​பாளர்​களின் பிரச்​சா​ரங்களால் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டாத​வாறு பார்க்க வேண்​டும்.

மீறு​பவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து தகவல்​களை​யும் உயர் போலீஸ் அதி​காரி​களின், வழி​காட்​டு​தலோடு தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்​குக் கொண்​டு​ செல்ல வேண்​டும், தேர்​தல் ஆணை​யம் நடத்​தும் அனைத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களி​லும் தவறாது பங்​கேற்க வேண்​டும்.

இவ்​வாறு சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாக போலீஸ்​ அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட டிஜிபி உத்தரவு
வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in