சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்: ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை

ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம்
சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்: ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை
Updated on
2 min read

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் ரூ.1,970 கோடி நிதிப் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக​வும், இதனால் கவுன்​சிலர்​களுக்​கான நிதி ஒதுக்​கீட்​டில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக​வும் மாமன்​றக் கூட்​டத்​தில் ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் விளக்​கமளித்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்​சி​யின் ஜூலை மாத மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது. துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கூட்​டத்​தில் வழக்​க​மாக குறைந்​த​பட்​சம் 80 முதல் 160 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும். ஆனால் இம்​மாதம் இது​வரை இல்​லாத வகை​யில் குறைந்த அளவில் மொத்​தம் 19 தீர்​மானங்​கள் மட்​டுமே நிறைவேற்​றப்​பட்​டன.

முன்​ன​தாக கூட்​டத்​தில் உறுப்​பினர்​கள் பேசி​ய​தாவது: திமுக உறுப்​பினர் பரிதி இளம்​சுருதி (99-வது வார்​டு): தீனத​யாளன் நகர் பகு​தி​யில் மாநக​ராட்சி நிதி​யின் கீழ் கட்டி முடிக்​கப்​பட்ட புதிய கழிப்​பறை திறப்பு விழாவுக்கு மாமன்ற உறுப்​பின​ரான எனக்​கும், மண்​டலக் குழு தலை​வருக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட​வில்​லை. இது அரசு நெறி​முறை​களை மீறும் செயல். அதே​போல் 2026-27-ம் ஆண்​டுக்​கான மாமன்ற உறுப்​பினர் மேம்​பாட்டு நிதி இது​வரை ஒதுக்​கப்​பட​வில்​லை.

பட்ஜெட்டை சார்ந்தது அல்ல

மேயர் பிரி​யா: மாநக​ராட்சி சார்​பில் நடை​பெறும் எந்​தவொரு திட்ட திறப்பு விழா​வாக இருந்​தா​லும் சம்​பந்​தப்​பட்ட மாமன்ற உறுப்​பினர், மண்​டலக் குழு தலை​வர்​களுக்கு கண்​டிப்​பாக தகவல் தெரிவிக்​கப்​பட்டு அழைப்பு விடுக்​கப்பட வேண்​டும்.

அதே​போல் மாமன்ற உறுப்​பினர் மேம்​பாட்டு நிதி என்​பது மாநில அரசின் பட்​ஜெட்டை சார்ந்​தது அல்ல. உறுப்​பினர்​களின் கோரிக்​கையை ஏற்று இந்த நிதியை விரைந்து விடுவிக்க மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் அதி​காரி​களு​டன் பேசி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்.

காங்​கிரஸ் உறுப்​பினர் சுகன்யா செல்​வம் (109-வது வார்​டு): பராமரிப்​புப் பணி​களுக்​காக வார்​டு​களுக்கு வழங்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்ட தலா ரூ.10 லட்​சம் எப்​போது கிடைக்​கும்? மேயர் பிரி​யா: பரிசீலனை​யில் உள்​ளது.

மண்​டலக் குழு தலை​வர் வே.​ராஜன் (143-வது வார்​டு): திமுக ஆட்​சி​யில் கொண்​டு​வரப்​பட்ட திட்​டங்​களுக்​கெல்​லாம் பெயர் மாற்​றம் செய்​வது​தான் ஆட்​சி​யாளர்​களின் வேலை​யாக இருக்​கிறதே? மேயர் பிரி​யா: கடந்த திமுக ஆட்​சி​யின்​போது அம்மா உணவகத்​தின் பெயர் மாற்​றப்​பட​வில்​லை.

மறைந்த முதல்​வர் ஜெயலலி​தா​வின் புகைப்​படம் அகற்​றப்​பட​வில்​லை. ஆனால் இன்​றைக்கு திமுக​வின் ஒவ்​வொரு திட்​டத்​துக்​கும் பெயர் மாற்​ற​மும், ஸ்டிக்​கர் ஒட்​டு​வதும் தான் நடந்து கொண்​டிருக்​கிறது. மக்​களும் அதை பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர்.

ரூ.2 ஆயிரம் கோடி நிலுவை

திமுக உறுப்​பினர் அதி​ய​மான் (105-வது வார்​டு): நகரின் பல்​வேறு பகு​தி​களில் 40 முதல் 50 அடி உயரத்​தில் விதி​களை மீறி பேனர்​கள் வைக்​கப்​படு​கின்​றன.

இதற்கு ஏதேனும் கட்​டுப்​பாடு உள்​ள​தா? மேயர் பிரி​யா: சென்னை மாநக​ராட்​சி​யின் தெருக்​களி​லும், முக்​கிய சாலைகளி​லும் விதி​களை மீறி வைக்​கப்​பட்​டுள்ள பேனர்​களை உடனடி​யாக அகற்ற அனைத்து மண்டல அதி​காரி​களுக்​கும் ஆணை​யர் உடனடி​யாக சுற்​றறிக்கை அனுப்ப அறி​வுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு மேயர் பிரியா பதிலளித்​தார்.

தொடர்ந்து மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் பேசுகை​யில், ``சென்னை மாநக​ராட்​சி​யின் மொத்த நிதி பற்​றாக்​குறை கடந்த 2022-23-ம் ஆண்​டில் ரூ.325 கோடி​யாக​வும், 2023-24-ம் ஆண்​டில் ரூ.355 கோடி​யாக​வும், 2024-25-ம் ஆண்​டில் ரூ.529 கோடி​யாக​வும் இருந்​தது.

இந்​நிலை​யில் 2025-26-ம் நிதி​யாண்​டின் இறு​தி​யில் நிதிப் பற்​றாக்​குறை ரூ.1,970 கோடி​யாக பன்​மடங்கு உயர்ந்​துள்​ளது. நிதி நிலையை சரி​யாக கையாள தீவிர சொத்​து​வரி, தொழில்​வரி வசூல் போன்ற பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதே​போல, ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு கொடுக்க வேண்​டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான பணம் நிலு​வை​யில் உள்​ளது. மேலும் நெருக்​கடி தொடர்ந்​தால் மேலும் கடன் வாங்​கும் நிலை ஏற்​படும்.

இதையெல்​லாம் கருத்​தில் கொண்​டு​தான் மாமன்ற உறுப்​பினர்​களுக்​கான நிதி ஒதுக்​கீட்​டில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. மாமன்ற உறுப்​பினர்​களுக்​கான நிதி ரத்து செய்​யப்​பட​வில்​லை. அடுத்த 3 மாதங்​களில் நிதிச் சூழலை பொருத்​து நிதி ஒதுக்​கீடு செய்​வது குறித்​து முடிவு செய்​யப்​படும்'' என்​று விளக்​கம்​ அளித்​தார்​.

சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்: ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை
தூய்மை பணி​யாளருக்​கான காலை உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி: ஆவடியில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in