மோசடி வழக்கில் கைதான அமைச்சரின் முன்னாள் உதவியாளரை காவலில் எடுக்க முடிவு

துணைபோன அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் சிக்குகின்றனர்?
ஜெய் பாலாஜி

ஜெய் பாலாஜி

Updated on
1 min read

மதுரை: மோசடி வழக்​கில் கைதான அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் உதவி​யாளர் ஜெய் பாலாஜியை காவலில் எடுத்து விசா​ரிக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். விசா​ரணைக்​குப் பின்​னர், அவருக்​குத் துணை​போன அதி​காரி​களும், அரசி​யல் புள்​ளி​களும் சிக்​கு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜனின் உதவி​யாள​ராக இருந்​தவர் ஜெய் பாலாஜி (42). பல்​வேறு புகார்​கள் காரண​மாக இவர் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், அமைச்​சரின் பெயரைப் பயன்​படுத்தி பல்​வேறு மோசடிகளில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும், கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரிடம் ரூ.50 லட்​சம் ரொக்​கம் மற்​றும் ரூ.7 கோடி மதிப்​புள்ள வீட்​டுமனை​களை வாங்கி ஏமாற்​றியதாகவும் புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தி ஜெய் பாலாஜி, அவரது மனைவி கலா​வதி ஆகியோரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

யார், யார் மூல​மாக, எந்​தெந்த மோசடிகளில் ஈடு​பட்​டார், அவருக்கு உதவிய முக்​கிய அரசி​யல் புள்​ளி​கள், அதிகாரி​கள் விவரங்​களை போலீ​ஸாரிடம் ஜெய் பாலாஜி கூறி​யுள்​ள​தாகத் தெரிவி​க்கிறது. எனவே, கணவன், மனைவி இரு​வரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்க போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: அமைச்​சரிடம் உதவி​யாள​ராக இருந்​த​தால், அந்த செல்​வாக்​கைப் பயன்​படுத்தி தனது ரியல் எஸ்​டேட் தொழிலை விரிவு​படுத்தி உள்​ளார். மாதந்​தோறும் தவணை முறை​யில் குறிப்​பிட்ட தொகை செலுத்​தி​னால், குறைந்த விலை​யில் வீட்​டுமனை என விளம்​பரம் செய்து கோடிக்​கணக்​கில் பணம் வசூலித்​துள்​ளார். அமைச்​சரின் உதவி​யாளர் என்​ப​தால் இவரை நம்பி மக்​களும், பல்​வேறு நிறு​வனத்​தைச் சேர்ந்​தோரும் ஏமாந்​துள்​ளனர்.

புகார் அளிக்க தயக்கம்: ஜெய் பாலாஜி மீது ஏற்​கெனவே பல வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவரால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் புகார் கொடுக்​கத் தயங்​கு​கின்​றனர். மதுரை மட்​டுமின்​றி, பிற மாவட்​டங்​களில் நடந்த ரியல் எஸ்​டேட் முறை​கேடு​கள் தொடர்​பாக​வும் அவர் மீது புகார் இருப்​ப​தால், அதற்​கான ஆவணங்​களைத் திரட்​டு​கிறோம்.

மதுரை கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் அளித்த புகாரில், ஓரளவுக்கு மட்​டுமே தகவல்​களைப் பெற முடிந்​தது. அவர் மீதான சில முறை​கேடு​களை விசா​ரிக்க காலஅவ​காசம் தேவைப்​படு​கிறது. எனவே, ஜெய் பாலாஜி, அவரது மனை​வியை காவலில் எடுத்து விசா​ரிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இதற்​காக நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்ய இருக்​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த விசா​ரணைக்​குப் பின்​னர், ஜெய் பாலாஜிக்கு உதவிய அதி​காரி​கள் மற்​றும் அரசி​யல் புள்​ளி​கள் சிக்​கு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>ஜெய் பாலாஜி </p></div>
மதுரை சிலைமான் அருகே அதிமுக நிர்வாகி கொலை: மனைவியே சதி செய்தது அம்பலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in