யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-வது இடம்: வாடிப்பட்டி எலெக்ட்ரிக் கடைக்காரரின் மகள் சாதனை

ராஜேஸ்வரி சுவே

ராஜேஸ்வரி சுவே

Updated on
1 min read

மதுரை: ​குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்​வில் தேசிய அளவில் 2-வது இடம்​பிடித்து மதுரை வாடிப்பட்டி எலக்ட்​ரிக்​ கல் கடைக்​காரர் முரு​க​தாஸ் என்பவரின் மகள் ராஜேஸ்​வரி சுவே சாதனை படைத்​துள்​ளார்.

மதுரை மாவட்​டம் வாடிப்பட்டியைச் சேர்ந்​தவர் முருகதாஸ். இவர், எலக்ட்​ரிக்​கல் கடை நடத்தி வரு​கிறார். இவரது மனைவி நாக​ராணி. அரசு உதவி பெறும் கலை அறி​வியல் கல்​லூரி​யில் கணிதத்​துறை உதவி பேராசிரிய​ராக பணி​யாற்​றி வருகிறார்.

இவர்​களுக்கு ராஜேஸ்​வரி சுவே என்ற மகளும், குமாரச்​செல்​வன் என்ற மகனும் உள்​ளனர். ராஜேஸ்​வரி சுவே கடந்த 2018-ல் பிஇ (இஇஇ) முடித்​து​விட்டு போட்​டித் தேர்​வுக்கு தயா​ராகி வந்​தார். ஏற்​கெனவே 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழு​திய நிலை​யில் 2024-ல் டிஎன்​பிஎஸ்சி குரூப்-1 தேர்​வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்​சி​ய​ரா​னார்.

தற்​போது சென்னை தலை​மைச் செயல​கத்​தில் பயிற்சி அதி​காரி​யாக பணியில் இருக்​கிறார். இருப்​பினும், பணிபுரிந்து கொண்டே தமிழக அரசின் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில் இணைந்து யுபிஎஸ்சி தேர்​வுக்கு பயிற்சி பெற்றார்.

பின்னர் தேர்வில் பங்​கேற்​று முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், தேசிய அளவில் 2-வது இடத்தை பெற்று ராஜேஸ்​வரி சுவே சாதனை படைத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘போட்​டித் தேர்​வுகளுக்​காக தொடர்ந்து பயிற்சி பெற்று வந்​தேன். 7 ஆண்​டு​கள் தொடர் முயற்​சி, உழைப்​புக்கு தற்​போது வெற்றி கிடைத்​துள்​ளது.

எனது பெற்​றோர் அளித்த ஊக்​கத்​தால் என்​னால் சாதிக்க முடிந்​தது. தமிழக அரசின் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில் 225 பேருக்கு மாதம்​தோறும் உதவித்​தொகை வழங்​கப்​படு​கிறது. இத்​திட்​டத்​தில் நானும் இணைந்து பயனடைந்​துள்​ளேன்’ என்று கூறி​னார்.

<div class="paragraphs"><p>ராஜேஸ்வரி சுவே</p></div>
நீலகிரியில் தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளம்: இரு மாநில போலீஸார் குவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in