பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம்: இந்திய கம்யூனிஸ்ட், தவாக ஆளுநருக்கு கண்டனம்

பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம்: இந்திய கம்யூனிஸ்ட், தவாக ஆளுநருக்கு கண்டனம்
Updated on
1 min read

சென்னை: ஆளுநர் மாளி​கைக்கு பொது​மக்​களை அழைத்து போட்டி அரசாங்​கம் நடத்த முயற்​சிப்​ப​தாக தமிழக ஆளுநருக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:

மு.வீர​பாண்​டியன்: ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற நூல் வெளி​யீட்டு விழா​வில் பேசிய ஆளுநர் அர்​லேகர், மக்​கள் தங்​களது பிரச்​சினை​களுக்கு தீர்​வு​காண ஆளுநர் மாளி​கையை அணுகலாம். கோரிக்​கைகளை ஆளுநர் மாளி​கை​யில் தெரிவிக்​கலாம் என பேசி​யிருப்​பது மாநில அரசின் நிர்​வாகத்​தில் நேரடி​யாக தலை​யிடும் அதி​கார அத்​து​மீறலாகும்.

இது தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மக்​கள் ஆட்​சிக்கு எதி​ராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்​தும் பகிரங்க அறி​விப்​பாகும். ஆளுநர் அதி​காரம் குறித்து தெளி​வாக​வும், திட்​ட​வட்​ட​மாக​வும் வரையறுத்து உச்​சநீ​தி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

எனவே, ஆளுநரின் அதி​கார அத்​து​மீறல் நடவடிக்​கையை தமிழக அரசும், முதல்​வரும் தடுத்து நிறுத்த உடனடி​யாக, சட்ட நடவடிக்​கைகளை​யும், அரசி​யல் ரீதி​யான நடவடிக்​கைகளை​யும் மேற்​கொள்ள வேண்​டும். குடியரசுத் தலை​வரும் நேரடி​யாக தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தி.வேல்​முரு​கன்: ஆளுநர் அர்​லேகர் மக்​களால் தேர்வு செய்​யப்​பட்​ட​வர் போல ஆய்​வுக்​கூட்​டம் நடத்​து​வதும், ‘என்​னிடம் கோரிக்​கைகளை சொல்​லுங்​கள்’ என்று கேட்​பதும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது.

மத்​திய அரசுடன் இணக்​க​மாக செல்​வது வேறு, இணங்கி செல்​வதுவேறு. இதை தமிழக அரசு கண்​டு​கொள்​ளாமல் இருப்​பது இணங்கி செல்​வதை போன்று தோற்​றமளிக்​கிறது. மத்​தி​யில் கூட்​டாட்​சி, மாநிலத்​தில் சுயாட்சி என்ற கடந்த கால வரலாறுகளை தமிழக முதல்​வர்​ கவனத்​தில்​ கொள்​ள வேண்​டும்​.

பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம்: இந்திய கம்யூனிஸ்ட், தவாக ஆளுநருக்கு கண்டனம்
மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்க ஆளுநர் அர்லேகர் முயற்சி: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in