மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் மாற்​றுத் திற​னாளி​கள் உதவித்தொகைக்காக விண்​ணப்​பித்த 5.29 லட்​சம் பேருக்கு உதவித்தொகை வழங்​கக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில அரசுகள் பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டது.

தமிழ்​நாடு மாற்​றுத் திற​னாளி​கள் உரிமை​கள் மற்​றும் தகவல் அறி​யும் உரிமைச் சட்ட ஆர்​வலர்​கள் இயக்​கத் தலை​வர் சுவாமிமலை சுந்தர விமல​நாதன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் மருத்​து​வர்​களால் அங்​கீகரிக்​கப்​பட்​டு, தேசிய அடை​யாள அட்டை மற்​றும் மத்​திய அரசின் மாற்​றுத்திற​னாளி​கள் தனித்​துவ அடை​யாள அட்டை பெற்ற 21 வகை​யான மாற்​றுத் திற​னாளி​கள் 5.29 லட்​சம் பேர் உள்​ளனர்.

இவர்​கள் மத்​திய அரசின் இந்​திரா காந்தி தேசிய மாற்​றுத் திற​னாளி​கள் உதவித்தொகை திட்​டத்​தின் கீழ் மாதந்​தோறும் ரூ.300 பெற இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு விண்​ணப்​பித்​தனர். ஆனால், இது​வரை உதவித்தொகை வழங்​கப்​பட​வில்​லை.

இவர்​கள் மாதந்​தோறும் ரூ.300 பெறத் தகு​தி​யானவர்​கள். மேலும், ரூ.300 என்​பதை ரூ.5 ஆயிர​மாக உயர்த்த வேண்​டும். எனவே, மாற்​றுத் திற​னாளி​களுக்கு உடனடி​யாக உதவித்தொகையை வழங்க மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ஆர்​.பூர்​ணிமா அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர், மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்​தர​விட்​டு, நீதிப​தி​கள் விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 89.25 அடியாக சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in