வில்லிவாக்கம் ஏரியில் 8.5 ஏக்கரில் கூடுதல் குளம்: பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

வில்லிவாக்கம் ஏரியில் 8.5 ஏக்கரில் கூடுதல் குளம்: பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​வில்லிவாக்கம் ஏரி​யில் 8.5 ஏக்​கரில் கூடு​தல் குளம் அமைக்​கும் பணி​களை விரைந்து முடிக்க, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை குடிநீர் வாரி​யம் வசம் இருந்த வில்​லி​வாக்​கம் ஏரி​யில் ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தின் கீழ் சீரமைக்க, 27.5 ஏக்​கர் கொண்ட ஏரிப் பகு​தி, மாநகராட்சியிடம் வழங்​கப்​பட்​டது.

இதில் முதற்​கட்​ட​மாக, ஏரி​யின் கொள்​ளளவு 20 ஆயிரம் கனமீட்​டரிலிருந்​து, 2.90 லட்​சம் கனமீட்​ட​ராக அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதனைத் தொடர்ந்​து, ஏரிக் கரைகள் அமைத்​தல், இருக்​கைகள் அமைத்​தல், குடிநீர் வசதி​கள் ஏற்​படுத்​துதல், நடை​பாதை அமைத்​தல், ஏரிக்கு மழைநீர் செல்ல மழைநீர் வடி​கால் பணி உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

மேலும், ஏரி​யின் குறுக்கே கண்​ணாடி தொங்​கும் பாலம் உள்​ளிட்ட பணி​கள் ரூ.7.44 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. அத்​துடன், ரூ.45 கோடி​யில் ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தின் கீழ், ஏரியை சுற்றி வேலி அமைத்​தல், ஏரி மற்​றும் தொங்​கும் பாலத்​துக்கு எல்​இடி விளக்​கு​கள் பொருத்​துதல் ஆகிய பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இதில் 2-ம் கட்​ட​மாக, தனி​யார் கூட்டு பங்​களிப்பு திட்​டத்​தின் கீழ், வண்ண இசை நீரூற்​று, படகு குழாம், புல்​வெளி பாதை, சிறு​வர் ரயில், நீர்​நிலை​யில் சறுக்கு விளை​யாட்​டு, பறவை​கள் பூங்கா உள்​ளிட்ட பொழுது​போக்கு பூங்​கா​வாக அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இப்​பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​து, பணி​களை விரைந்து முடிக்க அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். இந்த தனி​யார் கூட்டு பங்​களிப்பு மூலம் மாநக​ராட்​சிக்கு ஆண்​டுக்கு சுமார் ரூ.1 கோடி வரு​வாய் கிடைக்​கும்.

மேலும், இப்​பகு​தி​யில் தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் அறி​வுறுத்​தல்​படி, 8.50 ஏக்​கர் பரப்​பள​வில் சுமார் 60 ஆயிரம் கனமீட்​டர் நீர் கொள்​ளளவு தேக்கி வைக்​கும் வகை​யில், கூடு​தலாக ஒரு குளம் 8.5 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.7.90 கோடி​யில் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கிறது.

இதை​யும் ஆணை​யர் சமீரன் பார்​வை​யிட்​டு, பணி​களை விரைந்து முடிக்க உத்​தர​விட்​டார். இந்த ஆய்​வின் போது, மேற்​பார்​வைப் பொறி​யாளர் (சிறப்பு திட்​டங்​கள்) சுந்​தர​ராஜன், மண்டல அலு​வலர் இனியன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

வில்லிவாக்கம் ஏரியில் 8.5 ஏக்கரில் கூடுதல் குளம்: பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு
மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in