

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்
காங்கிரஸ் -இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அதிமுகவுக்கு அதிகளவில் உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால், அக்கட்சியின் செயல்பாடு முன்பிருந்ததுபோல தற்போது இல்லை. அக்கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் உள்ளனர். கட்சி பஞ்சாயத்துக்குகூட பாஜகவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடத்தும் கட்சி இன்னும் அரசியல் கட்சியாக மாறவில்லை. அது தற்போதும் ரசிகர் மன்றமாக தான் உள்ளது. விஜய்க்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அது ஆதரவு கூட்டமாக மாறலாம். ஆனால். அந்தக் கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம். அந்த வாக்குகள் சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் 2 கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை திமுகவுடன்தான் நடத்துகிறது. இதில் உடன்பாடு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.